இலங்கை!! மனைவியின் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலைசெய்த கணவன்.

0

அன்மையில் திம்புள்ள, பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யதன்சைட் தோட்டப் பகுதியில் ஒருவர் மண் வெட்டியால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (01.04.2018) ஞாயிற்றுகிழமை இரவு 09.30மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..,

தாக்கிய நபரின் மனைவிக்கும் சம்பத்தில் பலியான நபருக்குமிடையில் தகாத உறவுமுறை இருப்பதை அறிந்து கொண்ட நபர், இவர்கள் இருவரும் மரக்கறி தோட்டம் ஒன்றிற்குள் கதைத்து கொண்டிருந்ததை கண்ட மனைவியின் கணவர் இரண்டு பேரையும் மண் வெட்டியால் தாக்கிய போது சம்பவ இடத்திலே கள்ளகாதலன் பலியானதோடு, காயமடைந்த மனைவி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

சம்பவத்தில் பலியான நபர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவும் தனது மனைவிக்கு தெரியாமல் குறித்த பெண்னை சந்திக்கவந்துள்ளதாகவும், 50வயதுடைய ழூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.ரகு என பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இலங்கை; மனைவியின் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலைசெய்த கணவன்!

கொலை செய்த நபர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாகவும் இவர்களுக்கிடையில் உள்ள கள்ள தொடர்பு குறித்து, குறித்த நபருக்கு கணவரால் அறிவிக்கபட்டபோதும் தொடர்ந்தும் இவர்களுக்கிடையில் உறவு முறை தொடர்ந்தாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதவானின் மரண விசாரனைகளின் பின்னர் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கபட உள்ளதாகவும் சந்தேக நபர் இன்று (02.04.2018) திங்கள் கிழமை ஹட்டன் நீதாவன் முன்னிலையில் அஜர்படுத்தப்பட உள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் குறிப்பிட்டனர் .

சம்பவம் தொடர்பில் தொடர்ந்து மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியே போக சொன்ன ஆர்யா! கோபமாக, கண்ணீருடன் அபர்ணதி கேட்ட கேள்வி – மற்ற போட்டியாளர்கள் ஷாக்!
Next articleதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!