வெங்காயத்தை நாள்தோறும் பச்சையாக சாப்பிட்டால் நிகழும் அதிசயம்!

0

வெங்காயத்தை நாள்தோறும் பச்சையாக சாப்பிட்டால் நிகழும் அதிசயம்!

சல்பர், விட்டமின் C , B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதுடன், இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.

மேலும், இதிலுள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரிசெய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுடன், இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், எமது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

இதனைவிட, வெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோபாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காசநோய் வராமல் தடுப்பதுடன், வெங்காயம் கலோரிகள் நிறைந்ததாகவும், குறைந்தளவான சோடியம் மற்றும் கொழுப்புகள் அற்றதாகவும் காணப்படுவதனால் இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, இரத்தசோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது. குறிப்பாக பிரசவத்திற்கு பின்னர்; பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டு வரும் போது, தாய்ப்பால் சுரக்கும் தன்மை அதிகரிக்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த முத்திரையை செய்து பாருங்க! தூக்கமின்மை பிரச்சனை மட்டுமின்றி இந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்!
Next articleஇந்த‌‌ மாதத்தில் பிறந்தவர்கள் இந்த‌ மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்ம்!