பிக்பாஸ் போட்டிக்கு வந்துவிட்டால் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் இருக்கவேண்டும். குடும்பத்தை பிரிந்து இருப்பதை நினைத்துதான் பல போட்டியாளர்கள் உருக்கமாக கண்ணீர் விட்டுள்ளனர்.
இன்று பிக்பாஸ் போட்டியாளரான சாண்டியின் பிறந்தநாள். அதற்காக அவருக்கு வீட்டில் இருந்து மனைவி மற்றும் மகள் அனுப்பிய கிப்ட் வந்தது. அதை பார்த்து அவர் கதறி அழுதுவிட்டார். மேலும் அவரது குட்டி மகளின் வீடியோ ஒன்றும் டிவியில் போடப்பட்டது. அதில் விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பட பாடல் போடப்பட்டது.
அதை பார்த்த சாண்டி ஓவென அழ துவங்கிவிட்டார். அதை பார்த்து வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் அழ துவங்கிவிட்டனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: