பாலியல் உறவால் பரவும் நோய்களை சரியானமருத்துவ சிகிச்சை மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம். இவ்வாறானநோய்களில் சில பாலுறவு மூலமன்றிகுருதி, குருதிப் பொருட்கள் போன்றவற்றாலும் கடத்தப்படலாம். இந்நோய்கள்ஏற்படும்போது, தெளிவாக அறிகுறிகள் வெளித்தெரியாமல்இருப்பதனால், அவை இலகுவாக ஒருவரிலிருந்துமற்றவருக்குக் கடத்தப்படக்கூடும். பாலியல்உறவால் ஏற்படும் நோய்களுக்கு பொதுவான அறிகுறிகள் இருக்கும்,அவற்றை தெரிந்துகொள்ளுங்கள்,
பிறப்புறுப்புப் புண்
இந்த வகைப் புண்கள் ஒன்றோபலவோ இருக்கும். இவை வலியுடனோ வலிஇல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோநீருடன் கூடிய சிறு சிறுகொப்புளங்களாகவோ காணப்படும். இவை ஆண், பெண்இருவருக்கும் வரும்.
பிறப்புறுப்பிலிருந்துவெளிவரும் சீழ்
ஒரு மனிதனின் சிறுநீர் துவாரத்தின் வழி சீழ் வெளிப்படுமானால்அது நிச்சயமாகப் பால்வினை நோயின் அறிகுறியாகும். இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடனோ வலியுடனோவெளிப்படும். பெண்களுக்குத் துர்நாற்றத்தோடு சீழ் வெளிப்பட்டு துணிகள்கறைபடியுமானால் அது பால்வினை நோயின்அறிகுறியாகும்.
கவட்டியில்நெறிகட்டுதல்
ஆண், பெண் இருபாலருக்கும் கவட்டியில்அதாவது இடுப்பும் காலும் இணையும் பகுதியில்நெறிகட்டுதல். இது மிகவும் வலியினைஏற்படுத்தும்.
விதைப்பைவீக்கம்
ஆண்களுக்குவிதைப்பை வீக்கமும், வலியும் பால் வினைநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிவயிற்றில்தொடர்ச்சியான வலி
பெண்களுக்குதொடர்ச்சியான அடிவயிற்று வலி பால்வினை நோயாகஇருக்கலாம். உடலுறவின் போது எப்போதும் மிகுந்தவலி ஏற்படுமானால் அது நிச்சயமாக பால்வினைநோயின் அறிகுறியே ஆகும். இதில் ஒரு சில அறிகுறிகள்வெறும் தொற்றுக் கிருமிகளாலும் ஏற்படலாம். ஆனால் எதுவாக இருந்தாலும்உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வதுமிகவும் முக்கியம்.