வட்­டுக்­கோட்­டை­ வீடொன்றில் நடந்த பயங்கர சம்பவம்!

0

வட்­டுக்­கோட்­டை­யில் வீட்­டின் ஓட்­டைப் பிரித்து வாள்­க­ளு­டன் நுழைந்த கொள்­ளை­யர்­கள், மழை­யைச் தமக்­குச் சாத­மா­கப் பயன்­ப­டுத்தி, வீட்­டில் இருந்­த­வர்­களை மிரட்­டித், தாக்கி பெரு­ம­ளவு பணம் மற்­றும் நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அராலி செட்­டி­யார் மடம் பகு­தி­யில் நேற்று அதி­காலை இடம்­பெற்­றுள்­ளது.

நேற்று அதி­காலை கடும் மழைக்­கும் மத்­தி­யில், முகத்தை மூடிக்­கட்­டி­ய­வாறு ஓட்­டைப் பிரித்து வீட்­டி­னுள் இறங்­கி­யுள்­ள­னர். வீட்­டில் இருந்த வயோ­தி­பர்­கள் இரு­வ­ரை­யும், பெண் ஒரு­வ­ரை­யும் மிரட்டி நகை­க­ளைக் கேட்­டுள்­ள­னர். வீட்­டார் சத்­த­மிட்­ட­போ­தும், மழை­யால் அந்­தச் சத்­தம் அய­வ­லர்­க­ளுக்­குக் கேட்­க­வில்லை.

இதைச் சாத­க­மாக்­கிய கொள்­ளை­யர்­கள் வீட்­டைத் தமது கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருந்­த­னர். வாள் முனை­யில் பெண்னை மிரட்­டி­னர்.

பணிய மறுத்த அவரை வாளால் வெட்டி அணிந்­தி­ருந்த நகை­களை அப­க­ரித்­த­னர். 80 வயது முதி­ய­வரை மிரட்­டிக் கொட்­ட­னால் தாக்­கி­யுள்­ள­னர்.

அவ­ரது மனை­வி­யான 71 வய­துப் பெண்­மீ­தும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. சுமார் 3 மணி­நே­ரம் வீட்­டிலே இருந்து வீட்­டைச் சல்­ல­டை­யிட்ட கொள்­ளை­யர்­கள் பணம், நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்து தப்­பித்­துள்­ள­னர்.

கொள்­ளை­யர்­கள் வெளியே சென்ற பின்­னர், அல­ய­வர்­க­ளின் உத­வியை வீட்­டுக்­கா­ரர்­கள் கோரி­னர். காய­ம­டைந்த 80 வயது முதி­ய­வர் மற்­றும் வாள்­வெட்­டுக்கு இலக்­கான பெண் இரு­வ­ரும் யாழ்ப்­பா­ணம் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். காய­ம­டைந்த 71 வய­துப் பெண் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸா­ருக்கு வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.

கொள்­ளை­யி­டப்­பட்ட நகை, பணம் எவ்­வ­ளவு என்­பது தொடர்­பில் முழு­மை­யான விவ­ரத்தை அவர் கூற­வில்லை. வாள்­வெட்­டுக்கு இலக்­கான பெண் உள்­பட்ட தான் அணிந்­தி­ருந்த 18 பவுண் நகை­யைக் கொள்­ளை­யர்­கள் அப­க­ரித்­தார்­கள் என்­றும், முழு­மை­யான விவ­ரம் காய­ம­டைந்த பெண்­ணுக்கே தெரி­யும் என்று அவர் வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­துள்­ளார் என வட்­டுக்­கோட்­டைப் பொரி­ஸார் தெரி­வித்­த­னர். காய­ம­டைந்த பெண்­ணி­டம் வாக்­கு­மூ­லம் பெறும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் தொடர்­பில் விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­கின்­றன என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

அராலி செட்­டி­யார் மடச் சந்­தி­யில் இரவு வேளை­க­ளில் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் சோதனை நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

அந்த வீதி­யால் செல்­ப­வர்­களை மறித்து விசா­ர­ணை­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இவ்­வா­றி­ருக்க அந்­தப் பகு­தி­யி­லேயே உள்ள வீடொன்­றில் கொள்­ளை­யி­டப்­பட்­டது மக்­கள் மத்­தி­யில் அச்­சத்தை தோற்­று­வித்­துள்­ளது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுஷ்புவை வெளுத்து வாங்கிய சின்மயி! ஒரு குற்றவாளியைப் பார்த்து நல்லவர்னு சொல்றீங்களே!
Next articleமுதன்முதலாக வெளியான புகைப்படம்! தனது மகளின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகை அசின்!