லண்டனில் திடீரென நடந்த பயங்கரம்!

0

லண்டன் நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 16 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு லண்டன் யார்க் சாலை பகுதியில் இன்று அதிகாலை 12.45 மணிக்கு திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த 16 வயது சிறுவனை மீட்டு, தெற்கு லண்டன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில்,

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பொதுமக்களுக்கு குற்றவாளி குறித்த ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் கொடுக்குமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அந்தரங்க படங்கள் எடுத்து மிரட்டும் இளைஞன்… பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி!
Next articleபின்னணியில் நடப்பது என்ன! மர்ம புதைகுழியிலிருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 குழந்தைகள்.