ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் !

0

அழகான முக அமைப்பும், வசீகரமான தோற்றமும் கொண்ட துலா ராசி நேயர்களே. தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை ராகு ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வரும் 29-10-2019 வரை குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும்.

மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மன ஒற்றுமைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை அடைய முடியும்.

கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும். 29-10-2019 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் சனி, கேது சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். நல்ல சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெறுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும் குறையும்.

உத்தியோகம்
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயமானப் பலன்களைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகள் மறையும்.

கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்
பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. காய், கனி விளைச்சல் சிறப்பாக இருக்கும் கால் நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும்.

கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடை பட்டு கொண்டு இருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேமிப்பீர்கள். இசை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும் குறையும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ மாணவியர்
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் அமையும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 3-ல் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல நட்புகள் தேடி வரும். கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 3-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் அமையும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் சென்று நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 3-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். 29-10-2019 முதல் குரு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 3-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 3-ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 3-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 3-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சோர்வு மந்த நிலை விலகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும்.

அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,7,8

நிறம் – வெள்ளை, பச்சை

கிழமை – வெள்ளி, புதன்

திசை – தென் கிழக்கு

கல் – வைரம்

தெய்வம் – லட்சுமி

பரிகாரம்
வரும் 29-10-2019 முதல் குரு 3-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகல்யாண தேதியை அறிவித்த நயன்தாரா! மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்! எப்போது தெரியுமா!
Next articleராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 விருச்சிகம் !