கொழும்பு கோட்டையில் இருந்து பயணித்த ரயில் இரு வேறு பகுதிகளாக பிரிந்தமையால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டள்ளது.
நேற்று மாலை அவிஸ்ஸாவெல்ல நோக்கி பயணித்த ரயிலில் இருந்து இயந்திரம் வேறாக பிரிந்து சென்றமையினால் இந்த நிலை ஏற்பட்டது.
பொரள்ளை, கொட்டா வீதி ரயில் கடவைக்கு அருகில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ரயில் ஓடு பாதை மற்றும் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பொரள்ளை மற்றும் ராஜகிரிய வீதியில் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: