தென்னிலங்கையில் உயிரிழந்த தாயின் உடலுக்காக இரு தரப்பினர் மோதிக் கொண்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காலி, பத்தேகம பிரதேசத்தில் உயிரிழந்த தாயின் உடலுக்கு இறுதி நடவடிக்கை மேற்கொள்வதற்காக இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்டுள்ளது.
சடலத்தை நல்லடக்கம் செய்வதில் உரிமை பெறுவதற்கே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த 71 வயதான லலித்தா சாலட்டின் மகன் மற்றும் உறவினர் மகள் ஒருவர் இவ்வாறு சடலத்தை கோரி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் நீண்ட மோதலின் பின்னர் மகன், இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், நீதிபதியின் உதவியுடன் சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
அதற்கமைய பொலிஸாரின் பாதுகாப்புடன் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த தாயை, உறவினரின் மகள் நீண்டகாலம் பராமரித்து வந்தமையினால் இறுதி நடவடிக்கையினை மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.