யுவதியின் கடத்தல் உண்மையை அம்பலப்படுத்திய பொலிஸார்!

0

தென்னிலங்கையில் நேற்று அதிகாலை யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அம்பலந்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பலினால் 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டிருந்தார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கடத்தல் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யுவதியின் காதலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் திட்டம் குறித்த மாணவி மற்றும் அவரது காதலனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி, அதிகாலையிலேயே தனது தாயாரின் தொலைபேசியில் காதலனுக்கு அழைப்பேற்படுத்தி தன்னை கடத்தி செல்லுமாறு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய மாணவியின் காதலன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், அவரிடம் இருந்த துப்பாக்கி கீழே விழுந்து தோட்ட ஒன்று வெடித்துள்ளது.

தனக்கும், காதலனுக்கு இடையில் 7 வருட தொடர்பு இருந்தது, தங்கள் பெற்றோர் அதனை எதிர்த்தமையினாலும், வீட்டைவிட்டு செல்லத் தீர்மானித்ததாக கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீண்டும் தனது பெற்றோரிடம் திரும்பி செல்ல விரும்பவில்லை என அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியை கடத்த உதவிய ஏனைய 5 பேரும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியை கடத்திய காதலனுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் திணறும் மத்திய வங்கி! வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
Next articleவெளியான காணொளி! கொடுத்த வாக்கை நிறைவேற்றிய கமல்!