வாழைத் தோட்டத்துக்கு நீர் இறைப்பதற்காக மோட்டருக்குப் பொருத்தப்பட்டிருந்த மின்சார வயரைத் தொட்ட பெண், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கோப்பாய் மத்தியைச் சேர்ந்த தவராசா செபராணி (வயது-56) என்பவரே உயிரிழந்தவராவார்.
நீர் இறைப்புக்காக வாழைத் தோட்டத்தினுள் மின்சார வயர் இணைப்பு உள்ளது. மின்சார வயர் தொய்வடையாமல் இருப்பதற்காக அதனுடன் இணைந்து கட்டுக்கம்பி உள்ளது.
மின்வயர் பழுதடைந்து, கட்டுகம்பியுடன் தொடுகையில் இருந்துள்ளது. இதனை அறியாத பெண், மின்சார வயரைத் தொட்டுள்ளார்.
அதனுடன் இணைக்கப்பட்ட கட்டுக்கம்பியில் பாய்ந்த மின்சாரத்தினால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக இறப்பு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: