யாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்!

0

நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது.

முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், அடாவடியில் ஈடுபட்டதுடன் மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

அண்ணனை இலக்கு வைத்துத் தாக்குவதற்கு வந்த கும்பல் 16வயது மாணவனான தம்பியை வாளால் வெட்டியுள்ளது.

தலையில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇங்கிலாந்து சிறையில் எச்சில் தட்டுகளை கழுவும் விக்கிப்பீடியா நிறுவனர்!
Next articleநடிகை ராதிகா வீட்டில் கொண்டாட்டம்! உச்ச கட்ட மகிழ்ச்சியில் சரத்குமார்! வைரலாகும் புகைப்படம்!