புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் அற்புத தானியம்! புற்று நோய் வராது காக்கும் தானியம்!

0

எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரிந்ததனாலோ என்னவோ அன்று முதல் இன்று வரை உணவில் எள்ளு சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றோம். உங்களுக்கு தெரியமா? ஒரு பிடி எள்ளு சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் இருப்பதுடன், புற்றுநோய் வந்தவருக்கும் அருமருந்தாக காணப்படுகின்றது என்று இப்போதைய பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் ஒன்றாகிய எள்ளில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை காணப்படுகின்றதனால், இதனை சரியான அளவில் எடுத்து கொண்டால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய முழுமையான பலனைப் பெற முடியும்.

தாய்லாந்து ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களில் முக்கிய விடயமாக, கருப்பு எள், புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுப்பதுடன், மூளை செல்களை மறு உற்பத்தி செய்கின்றது. மேலும், எள்ளில் உள்ள முக்கிய வேதி மூல பொருளான ” Sesamin ” தாதுக்களை விட நேயெதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்கின்றது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து வழங்குகின்றது.

பெண்களுக்கு எப்படி..?

பெண்கள் தினமும் எள் சாப்பிட்டு வரும் போது அதிகளவில் பெண்களைத் தாக்குகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறதுடன், இரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. மேலும், மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் தடுப்பதுடன், குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கின்றது.

கருப்பா..? வெள்ளையா..?

எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் வெள்ளை எள்ளுடன் ஒப்பிடுகையில், கருப்பு எள் தான் அதிகளவில் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்து காணப்படுவதனால் கூடியளவான மகத்துவம் பெற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு சாப்பிடலாம்..?

தினமும் அரை ஸ்பூன் எள்ளை உணவுடன் குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ் உடன் சேர்த்து சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது மிகச்சிறப்பானது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த இரண்டு பழங்களை மட்டும் எப்போதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள் மரணத்தை கூட விளைவிக்குமாம்..!
Next articleஇன்றைய ராசிப்பலன் வியாழக்கிழமை – 20.12.2018 !