மூளையின்றி பிறந்த அதிசய சிறுவன்! தற்போது எப்படி உள்ளான் தெரியுமா!

0

பிரித்தானியாவில் சிறுவன் ஒருவன் பிறக்கும் போது மூளையின்றி பிறந்தாலும் தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பது மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியான கம்ப்ரியாவைச் சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி கடந்த 2013 ஆம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்த போது, வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது குழந்தை மூளை இல்லாமல் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய பரிந்துரைத்தனர். இருப்பினும் குறித்த கருக்கலைப்பினை விரும்பவில்லை. அந்தக் குழந்தை பிறக்கும்போது மூளைப் பகுதியில் 2 விழுக்காடு மட்டும் வளர்ச்சி இருந்தது தெரியவந்தது.

நோவா வெல் என பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை பார்வையின்றி, பேசும் மற்றும் கேட்கும் திறனின்றி வளர்ந்தது. பின்னர் நோவாவை அவுஸ்திரேலிய மருத்துவர்களின் கண்காணிப்பில் பெற்றோர் ஒப்படைத்தனர்.

3 வயதுக்குப் பின் நோவாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சையால், நோவாவின் மூளை வளர்சி விகிதம் அதிகமானது. அதனைத் தொடர்ந்து அந்தச் சிறுவனுக்கு பார்வை, திரும்பக் கிடைத்தது. மேலும் பேசவும், எழுதவும் நோவாவிற்கு மருத்துவர்கள் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் மூளையின்றி பிறந்த குழந்தைகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு உள்ளாகவே இறந்து விட்டனர். இந்த நிலையில் நோவா 6 ஆண்டுகளைத் தாண்டி வாழ்வதால் நீண்ட காலம் உயிர்வாழ வைக்க முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதலைவர் முதல் தளபதி வரை – வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை!
Next articleதேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அன்றாட இந்த உணவுகளை கொடுங்கள்! மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்!