மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து ஆவாரம்பூ.
ஆவாரம்பூ கஷாயம் சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இந்த கஷாயத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆவாரம்பூ – 100 கிராம்,
சுக்கு – ஒரு துண்டு,
ஏலக்காய் – 20,
உலர்ந்த வல்லாரை இலை – 100 கிராம்,
சோம்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.
தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.
பின்னர் அதனை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம். சூப்பரான ஆவாரம்பூ கஷாயம் ரெடி.
ஆவாரம் பூவின் இதர மருத்துவக் குணங்களை கீழே தொடர்ந்து பார்க்கலாம்…
இதை இயற்கையாக பூவாக கண்டாலும், இது ஒரு மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து என்று தான் கூற வேண்டும். தலை முடி வளருவதில் இருந்தும் நீரழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள் என பல ஆரோக்கிய நன்மைகள் பெற ஆவாரம்பூ உதவுகிறது.
தலைமுடி வளர!
நெல்லிக்காய், செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, வெந்தயம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொண்டு, நல்லெண்ணையில் காய்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.
உடல் எரிச்சல் குறைய!
ஆவாரம்பூ, காய், பட்டை, இலை, வேர் அனைத்தையும் காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் குறைந்த நல்ல தீர்வுக் காண முடியும்.
உடல் பலம்!
உடல் பலம் அதிகரிக்க வேண்டும் என விரும்புவோர், ஆவாரம்பூவை பாலில் கலந்து குடித்து வரலாம்.
மின்னும் சருமம்!
மினுமினுப்பான சருமம் பெற வேண்டும் எனில், ஆவாரம்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
நீரிழிவு நோய்!
ஆவாரை கொழுந்து, ஆவாரம்பூ, ஆவாரை இலை, கீழாநெல்லி, நெல்லி வற்றல் ஆகியவற்றை ஐந்து கிராம் அளவு எடுத்து, மோர் விட்டு நன்கு அரிது, அதை உலர்த்தி காலை, மாலை அரை கிராம் அளவு மோரில் கலந்து உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும்.
ஆவாரம்பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் தாக்கம் குறைய வாய்ப்புகள் உண்டு.
மலச்சிக்கல்!
அவாரம்பூவின் நடுவில் இருக்கும் பகுதியை 50 கிராம் அளவு எடுத்து, இரவு நீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிக்கட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
மாதவிடாய்!
அசோகமட்டை, மருதம்பட்டை, ஆவாரம் பூ, திரிகடுகு பொடி, திரிபலா பொடி அனைத்தையும் போடி செய்து, சண்ட வைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சீராகும்