தாம்பத்தியத்தில் உங்கள் மனைவியை திருப்திப்படுத்த வேண்டுமா? இந்த மூலிகை டீயை தினமும் 1 கப் குடியுங்கள்!

0

இந்த உலகில் பலவித மூலிகைகள் உள்ளன. ஒவ்வொன்றிருக்கும் ஒரு தனித்துவமான தன்மை இருக்கின்றன. மூலிகைகளை நாம் அளவாக பயன்படுத்தினாலே அவற்றின் முழு பயனும் உடலுக்கு கிடைத்து விடும். நமது வீட்டிலே சில வகையான மூலிகை தன்மை நிறைந்த உணவுகள் உள்ளன.

இது போன்ற மூலிகைகளை அந்த காலத்திலே சித்தர்களால் பரிசோதிக்கப்பட்டு ஏராளமான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது. ஆண்மை குறைவு பிரச்சினை முதல் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரை, இந்த வகை மூலிகைகள் குணப்படுத்துகின்றன. இதே போன்ற பயனை தர கூடியது தான் சிறுகாஞ்சொறி மூலிகை செடியும். இதை நம் வீட்டு பக்கத்திலே காண முடியும். சித்தர்கள் ஓலை சுவடியில் இந்த மூலிகையின் திறனை பற்றி குறிப்பு கொடுத்துள்ளனர். இதன் முழு பயனையும், இது எப்படி ஆண்களுக்கு உதவுகிறது என்பதையும், இதில் எவ்வாறு டீ தயாரிப்பது என்பதையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்

இந்த சிறுகாஞ்சொறி செடி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இதன் இலைகளில் தான் அதிக மூலிகை தன்மை நிறைந்துள்ளதாம். வீச்சு வீச்சாக இதன் இலைகள் இருக்கும். இதனை காலையில் டீ போல தயாரித்து குடித்தால் உடலில் எண்ணற்ற நற்பயன்கள் உண்டாகும்.

உடலில் பல காலமாக சேர்ந்துள்ள நச்சு தன்மையுள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த சிறுகாஞ்சொறி மூலிகை பயன்படுகிது. குறிப்பாக அடி வயிற்று பகுதி, கிட்னி, பித்தப்பை போன்ற உறுப்புகளில் வருட கணக்காக உள்ள அழுக்குகளை வெளியேற்ற இது உதவுகிறது.

சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்றுகள் உண்டாகினால் அவ்வளவு தான்.இது போன்ற கிருமிகளை அகற்றுவதில் இந்த சிறுகாஞ்சொறி செடி நன்கு வேலை செய்யும். மேலும், பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்களையும் இது வெளியேற்றி விடும்.

இரத்தத்தில் உள்ள அணுக்களை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். மேலும், அனைத்து உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்த இந்த மூலிகை வழி செய்யும்.

ஆணுறுப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்த புற்றுநோய் செல்கள் உண்டாகும். இதன் வளர்ச்சியை முழுவதுமாக குறைக்க சிறுகாஞ்சொறி செடி பயன்படுகிறது. குறிப்பாக ஆணுறுப்பில் உண்டாகும் ப்ரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த மூலிகைக்கு இருக்கிறதாம்.

ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் DNA மாற்றம் பெறும். இதே நிலை நாளடைவில் தோடர்ந்தால் DNA சிதைந்து விடும். ஆனால், உங்களை இந்த அபாயத்தில் இருந்து காக்க சிறுகாஞ்சொறி மூலிகை உள்ளது. இதன் டீயை அன்றாடம் குடித்து வந்தால் DNA சிதைவு அடையாது.

சிறுகாஞ்சொறி செடியின் டீயை குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும் என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனின் உற்பத்தியை உயர்த்தி, ஆண்கள் தாம்பத்திய வாழ்வில் அதிக ஆற்றலுடன் செயல்பட செய்யுமாம்.

பெண்களின் உடலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இது நல்ல தீர்வை தரும். கூடுதலாக மூட்டு வலி, தசையில் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

எங்கே பார்த்தாலும் முடியாகவே உள்ளதா..? இந்த பிரச்சினை பலருக்கும் உள்ளது. ஒரு காலத்தில் அதிக அளவில் முடி இருந்து, பின்னர் மொத்தமாக கொட்டி விடுகிறது. இந்த நிலை வழுக்கைக்கு வழி வகுக்கிறது. இந்த சிறுகாஞ்சொறி மூலிகை, வழுக்கை இருந்த இடத்தில் மீண்டும் முடியை வளர வைக்குமாம்.

ஒரு பாத்திரத்தில் 750 மி.லி தண்ணீரை கொதிக்க விட்டு அதில் 10 சிறுகாஞ்சொறி இலைகளை போடவும். 15 நிமிடம் கழித்து இதை வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த நீருடன் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.

சிறுகாஞ்சொறி மூலிகை டீ பலவித நன்மைகளை தந்தாலும் ஒரு சில பக்க விளைவுகள் உண்டாகும். அதாவது, நாம் இதனை சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் மருந்தோடு சேர்த்து சாப்பிடும் போது சில பக்க விளைவுகள் உண்டாகும். எனவே, இந்த டீ-யை மருத்துவரின் ஆலோசனை பெற்று குடிப்பது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வரும்!
Next articleபாதத்தின் கருமையை போக்க சில டிப்ஸ்.