மூலச்சூட்டைத் தணிக்க வெங்காயத்தை இப்படி ட்ரை பண்ணுங்க.!

0

குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வந்தால் காய்ச்சல் தணியும்.

*வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீரை நன்கு வெளியாக்கும்.

* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

* காதிரைச்சல், காது வலி முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.

* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.

* வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தவிர்க்கலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் இது பயன்படுகிறது.

* இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.

* முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது வாந்திபேதியின்போது உண்டாகும் தாகம், அயர்ச்சி முதலியவைகளுக்கு நல்லது.

* பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

* நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்:-

ஈரப்பதம் – 86.6%
புரதம் – 1.2%
கொழுப்புச்சத்து – 0.1%
நார்ச்சத்து – 0.6%
தாதுச்சத்து – 0.4%
மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7%

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெம்பட்டை மற்றும் இளநரை நீங்க சிறந்த மருத்துவ முறைகள்!
Next articleஇந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும்! கடன் தொல்லை தீர சொல்லவேண்டிய சக்திவாய்ந்த மந்திரம்!