மாரடைப்பை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்! தினமும் சாப்பிடுங்கள்!

0

மாறிவரும் உணவுப்பழக்கத்தினால் உடல் பருமன் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டு இன்றைய சூழ்நிலையில் எந்த நேரத்தில் யாருக்கு என்ன நேரும் என்று யாராலும் அறிய முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்தவையில் இத்தகைய மாரடைப்பு ஏற்படுவதனை சிலவகையான உணவுகளின் மூலம் நாம் தடுக்க முடியும்.

சீத்தாப்பழம்

ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் கொண்ட சீதாப்பழம் வெளித்தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி மிகவும் இனிப்பாகவும் நல்ல மணத்தையும் கொண்டதுடன், உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் வாரி வழங்குகின்றது.

சீத்தாப்பழத்தில் உள்ள மக்னீசியம் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாப்பதுடன், மூட்டுகளில் உள்ள அதிகப்படியான அமிலத்தை நீக்கி, ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைப்பதுடன், தசைகள் பலவீனமாவதையும் தடுக்கும்.

சீத்தாப்பழத்தில் உள்ள காப்பர் மற்றும் நார்ச்சத்து சமிபாட்டிற்கு உதவுகின்ற அதேவேளை குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.

மேலும், இதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி என்பன கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், வைட்டமின் பி மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைப்பதுடன், ஆஸ்துமா பிரச்சினை ஏற்படாமல்; பாதுகாக்கின்றது.

மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன?

அதிகமான ரத்த அழுத்தம்;, சர்க்கரை நோய்;, புகைப்பழக்கம், அதிக கொலஸ்ட்ரால், உடல் உழைப்பு சிறிதும் இல்லாமை,அ திக உடல் எடை கொண்டவர்களுக்கு கார்டியாக் அரஸ்ட் எனப்படும் மாரடைப்பு ஏற்பட அதிகளவிலான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article42 வயதில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய சுஷ்மிதாசென்- புகைப்படம் இதோ!
Next articleநடிகை ஸ்ரீதேவியின் சொத்து மதிப்பு இத்தனை மில்லியன்!