பொதுவாக ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருப்பதனால் நாம் வாங்கும் உணவு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. எனவே, தவிர்க்க முடியாத சூழலில் ஓட்டல் உணவைச் சாப்பிட நேர்ந்தால், வாங்கிய உடனே சாப்பிட்டுவிட வேண்டுமே தவிர அதனை பிரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. அத்தகைய உணவுகளாக,
சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகள்
புரதம் அதிகம் உள்ள மாமிச வகைகளை ஒருமுறைக்கு மேல் சூடேற்றுவதால சமிபாட்டுப் பிரச்சினைகள், புட் பாய்சனிங் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதனால் சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகளை சமைத்த பிறகு குளிரூட்டுவதும் மறுபடியும் சூடேற்றி பயன்படுத்துவதும் முற்றிலும் தவறான ஒரு நடவடிக்கையாகும். முட்டை உணவுக்கும் இது பொருந்தும்.
பால் மற்றும் காபி-டீ
பால் மற்றும் காபி-டீ போன்றனவற்றை எப்போது தேவையோ அப்போது மட்டும் அளவாகச் சூடேற்றி, அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். மாறாக மறுபடியும் சூடேற்றினால், சுவையில் வேறுபாடு ஏற்படும் இருக்கும்.எனவே டீ-காபியை மீண்டும் சூடாக்கி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
காளான்
பச்சைக் காளான்களை நறுக்கும்போதே, அதில் உள்ள புரதச்சத்து அழியத் தொடங்கிவிடும் என்பதனால் காளானில் இருக்கும் சத்தை முழுமையாகப் பெறுவதற்கு, உடனடியாக சமைத்துச் சாப்பிடுவதே சிறப்பான வழியாகும்.
கீரைவகை
கீரைகளில் ‘நைட்ரேட்ஸ்‘ உள்ளதனால் பல மணி நேரம் கழித்து மறுபடியும் கீரையை சூடேற்றும் போது, அதில் உள்ள நைட்ரேட்ஸ் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனமாக மாறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் கீரைகளை தேவைக்கு ஏற்ப சமைத்து, உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும்.
பருப்பு மற்றும் தானியங்களை
பருப்பு மற்றும் தானியங்களை மீண்டும் சூடாக்குவதால் அவற்றிலுள்ள புரதச்சத்து அழிந்துவிடும்.
By: Tamilpiththan