திமுக தலைவர் கருணாநிதிக்கு பெரிய அளவில் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நரேந்திர மோடி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகிய பின்பு தமிழகமே தற்போது பரபரப்பாக உள்ளது.
அதுமட்டுமின்றி கருணாநிதியின் குடும்பத்தினர் கோபாலபுரம் வீட்டிற்கு கண்ணீருடன் சென்றனர்.
இந்நிலையில் நரேந்திரமோடி கருணாநிதிக்கு பெரிய அளவில் மரியாதை செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருணாநிதிக்கு அண்ணா நினைவிடத்துக்கு அருகில் தான் இடம் வேண்டும் என முதல்வரிடம் திமுக வினர் கோரிக்கை வைத்த நிலையில், கருணாநிதிக்கு பெரிய அளவில் மரியாதை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: