மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா! இதோ தீர்வு!

0

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வாகும்.

அந்த மாதவிடாய் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு தாங்க முடியாத வயிற்று வலிகள் ஏற்படும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நேரங்களில் இறுக்கமான தசைகள் சுருங்கி உதிரப்போக்கை ஏற்படுத்தும் போது, கர்ப்பப்பையானது இறுகி, தசைகளில் வலியை உண்டாக்குகிறது.

மேலும் அவ்வாறு இறுகுவதால் கர்ப்பப்பையிலிருந்து அதிக ரத்தச் சசிவு உண்டாகாமல் தடுக்கப்படுகிறது.

எனவே மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வயிற்று வலிகள் ஏற்படுகிறது.

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை இயற்கையான முருங்கை இலை ஜூஸ் மூலம் மிகவும் எளிதாக குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்
முருங்கை இலை – கைப்பிடி அளவு
தேன் – 1 ஸ்பூன்
நீர் – கால் கப்
செய்முறை
முருங்கை இலை மற்றும் சிறிதளவு நீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த முருங்கை இலை சாறுடன், 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்.

மாதவிடாயின் போது தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த முருங்கை இலை ஜூஸை குடித்து வந்தால், வயிற்று வலி குறைந்து, உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article07.11.2018 இன்றைய ராசிப்பலன் – ஐப்பசி 21, புதன்கிழமை !
Next articleஉடற்பயிற்சிக்கு முன் இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்!