மஹா குருப்பெயர்ச்சி – கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்? பாகம் 2

0

மனித வாழ்க்கையின் ஏற்றம் – இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்.

தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார். இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 04.10.2018 மற்றும் 11.10.2018 ஆகிய இரு நாட்கள் குருப் பெயர்ச்சி மகா யாகம் நடைபெறுகிறது.

சரி வாருங்கள்…இந்த மகா குருப்பெயர்ச்சியால் எந்த எந்த ராசிகளுக்கு என்ன என்ன பலன் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

துலாம்
கள்ளமில்லா உள்ளம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே 11-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சியாகவிருக்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். நின்று போன சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள், புதிய வீடு, புதிய வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். உடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

கொடுத்த கடன்களும் சரியான வட்டியுடன் வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். குழந்தைகள் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

அவ்வப்போது சிறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டாலும், விரைவில் சரியாகிவிடும். இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலும் மனமும் மிகவும் ஓய்வாகவும் அமைதியாகவும் இருப்பதை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அவர்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்வீர்கள். வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள்.

உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு வெற்றி உண்டாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் தேவையறிந்து பணி செய்து மக்களின் அபிமானத்தை பெற வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை அடைத்து விடக்கூடிய அளவில் பொருளாதார நிலை உயரும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும். ஆபரணம், ஆடை போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

உங்களின் மறைமுக எதிரிகள் ஒழிந்து உங்களின் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றிகளை காண்பீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளை செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையேயிருந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகிஸ்தர்கள் பணியில் திறம்பட செயல் புரிவார்கள். நீங்கள் எதிர்பார்த்த விடயங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடக்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

புதிய வீடு கட்டுதல் அல்லது புதிய வீட்டு மனை வாங்குதல் போன்ற யோகம் சிலருக்கு உண்டாகும். பெரிய அளவில் பொருளை முதலீடு செய்யும் தொழில்களில் நல்ல லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் புரிவார்கள். உடல் நிலை ஆரோக்கியம் மற்றும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

நீங்கள் எதிர்பாராத வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆன்மீக மற்றும் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். கோவில் சம்பந்தமான காரியங்கள், பொது நல சேவைகளிலும் ஈடுபடுவீர்கள்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

சுப காரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழில் வியாபாரங்களில் போட்டி கடுமையாகும். கொடுத்த கடன்கள் அனைத்தும் வட்டியுடன் வசூலாகும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வெல்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் சுமூக உறவும், அவர்களால் தக்க சமயத்தில் உதவிகளும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி உங்களுக்கு அந்த சொத்து வந்து சேரும். புத்திரர்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை பெறும். சகோதரரர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். தடையின்றி பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் முதலீட்டிற்கு அதிகமான லாபத்தை பெறுவீர்கள். பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு ராகு – கேது கிரகங்களின் தற்போதைய நிலை பாதகமாக இருப்பதால் செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவன், பைரவர் மற்றும் சரபேஸ்வரையும் வழிபடுவது நல்லது. தொழு நோயாளிகளுக்கு ஆடைகள், அன்ன தானம் போன்றவற்றை செய்வது சிறந்த பரிகாரமாகும்.

விருச்சிகம்:
முன்கோபம் மற்றும் நேர்மை குணத்தை அதிகம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, 11-10-2018 அன்று உங்கள் ராசியிலேயே குரு பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு அவ்வப்போது உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். எதிலும் சுறுசுறுப்பாக செயலாற்ற முடியாத நிலை ஏற்படும். இந்த ராசியினருக்கு ஏழரை சனியில் பாத சனி நடைபெறுவதால் நெருங்கியவர்களிடமே சண்டையிடும் நிலை ஏற்படக்கூடும். தம்பதிகள் பிரிந்து வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தும். பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துரோகங்களுக்கு ஆளாக கூடிய நிலை ஏற்படும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் மிகவும் தாமதமாகவே கிடைக்கும். பணியாளர்கள், தொழிலாளர்களால் சிலருக்கு பிரச்சனைகள் உருவாகும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. உங்களுக்கு மேல் உயர்பதவிகளிலிருப்பவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஞாபக மறதி, டென்ஷன் போன்றவை அடிக்கடி ஏற்படும். உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். குறித்த நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு இருக்கும். குடும்பத்தினர் சிலரின் ஆடம்பர செலவுகள் உங்களை கோபப்படுத்தும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பிறருக்கு கொடுத்த கடன்களை திரும்ப கேட்கும் போது சிலர் காவல் நிலையம், நீதிமன்றம் போன்றவற்றிற்கு செல்லும் நிலையையும் சிலருக்கு ஏற்படுத்தும்.

தொழில், வியாபாரங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறுவீர்கள். சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வியாபார ரீதியன பயணங்களை மேற்கொள்வது அவசியம் தானா என்பதை ஆலோசிக்க வேண்டும்.

உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தாங்கள் பேசும் போது கவமுடன் பேசுவதால் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சிகளின் தொல்லையால் பாதிப்பு ஏற்படும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படும். சிலருக்கு குழந்தை பிறப்பு தள்ளி போகும்.

பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர்கள் மனதை அலைபாயவிடாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

சிலருக்கு கை மற்றும் கால்களில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் தகுந்த சமயங்களில் ஆதாயங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் சுமாரான நிலையே இருக்கும். பிறருக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வதாலும், அவர்களின் அறிவுரைகளை கேட்பதாலும் நல்ல லாபங்களை தொழிலில் பெற முடியும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

இக்காலங்களில் எதிலும் சற்று ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் வியாபார முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, சேர்ந்து வாழ்வார்கள். நன்கு சிந்தித்து புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உடலில் சோர்வு மற்றும் மந்த நிலை அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்து செயலில் திறன்களை காட்ட வேண்டும். சுப காரிய முயற்சிகள் வெற்றியடையும். கொடுத்த கடன்கள் அனைத்தும் வட்டியுடன் வசூலாகும். கல்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறருடைய விடயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தேவையற்ற பொருட்களை வாங்கி வீண் செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடிய விரைவில் நடக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு வேறு சிறந்த இடங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உறவினர்களிடம் சுமூகமான உறவு நீடிக்கும். எல்லாவற்றிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களிடம் வீண் அரட்டைகள் அடிப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதிர்பாரா வகையில் உங்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் கிடைக்க கூடும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

பண வரவு சிறப்பாக இருக்கும். பிறந்த உறவினர்களும் நண்பர்களும் ஒன்று சேர்வார்கள். உடல் நிலை நன்றா இருக்கும். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்க நேரிடும். மாணவர்களின் மந்த நிலை நீங்கி கல்வியில் மிளிர்வார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகிஸ்தர்கள் பணியில் திறம்பட செயல் பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

பரிகாரம்

உங்கள் ஜென்ம ராசியிலேயே குரு பகவான் சஞ்சரிக்க போவதால் குருவின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வர வேண்டும். இந்த கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. பாத சனியின் கெடுபலன்கள் நீங்க சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனியின் அருளை பெற்று தரும்.

தனுசு:
மற்றவர்களுக்கு உதவி புரியும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 11-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதனால் இவ்வளவு காலம் நன்றாக இருந்த பொருளாதார நிலையில் சிறிது சுணக்கம் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். டென்ஷன் அதிகமாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் அதிகம் ஏற்படும். எல்லாவற்றிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது உங்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

பிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் வெளிநபர்களிடம் பேசும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது. பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க முடியும்.

ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், வயிற்றுக்கோளாறுகள் போன்ற உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியிலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களின் வருகையால் உங்களுக்கு சற்று நிம்மதி ஏற்படும்.

காண்ட்ராக்ட் தொழிலில் இருப்பவர்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். தொழில் கூட்டாளிகளே துரோகம் புரிய கூடும். வியாபாரங்களில் சுமாரான நிலையே இருந்தாலும் பொருட்கள் அனைத்தும் தேக்கம் ஏற்படாமல் விற்று தீரும்.

உத்தியோகிஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியும் திருப்தியான நிலையும் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அரசியல்வாதிகள் பொது மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பு எதிலும் ஒரு முடிவுக்கு வருவது நல்லது. விவசாயிகள் அதிக விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. அரசு வழியில் எதிர்பார்த்த பயிர் மானியங்கள் கிடைக்கும். கலைஞர்கள் ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பிறரிடம் கடனை வாங்கும் நிலையை தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவதற்கு முன்பு பல முறை யோசித்து ஈடுபடுவது நல்லது. பண வரவு ஓரளவிற்கு நல்லபடியாக இருப்பதால் வாங்கிய கடன்களை முதலில் அடைப்பீர்கள். தொழில் வியாபாரங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை தவற விடாமல் பிடித்து கொள்வது நல்லது. அவ்வப்போது மருத்துவ செலவுகளும் ஏற்படும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களால் பல அனுகூலங்களை பெற முடியும். அசையா சொத்துக்களால் சிறிது பொருள் விரயம் ஏற்படும். செய்யும் பணிகளில் நிம்மதி இருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது சிறிது மனசஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உடலில் வயிறு சம்பந்தமான நோய்கள் சிலருக்கு ஏற்ப்பட்டு நீங்கும். பொருள் வரவில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

அன்றாட பணிகளையே சரியாக செய்ய முடியாத நிலை சிலருக்கு ஏற்படும். எந்த ஒரு விடயத்திலும் விட்டுக் கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மை தரும். உங்களுக்கு மறைமுக எதிரிகள் அதிகமாவர். கூட்டாளிகளும் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வருவார்கள். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தினரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணிமாறுதல்கள் கிடைக்கும். வேலைபளு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசாங்க வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவததை ஒத்திப்போடுவது நல்லது.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

எல்லா விடயங்களிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும். எல்லாவற்றிலும் கடினமான முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விரும்பிய பலன்களை பெற முடியும். தொழில் வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும். சக பணியாளர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சிலர் சந்திக்க கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு குரு 12 ல் இருப்பதால் குரு பகவானை வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். இக்கிழமைகளில் குரு பகவானுக்கு விரதமிருப்பதும் சிறந்தது. சனி பகவானும் உங்களுக்கு பாதகமான நிலையில் இருப்பதால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட சனியின் கெடுபலன்கள் ஏற்படாமல் காக்கும்.

மகரம்
அனைவரிடமும் உண்மையான அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களே, 11-10-2018 அன்று உங்களின் ராசிக்கு 11 ஆம் இடத்தில் குரு பெயர்ச்சியாகவிருப்பதால், இவ்வளவு காலம் இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நிலை மாறும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் வட்டியுடன் அடைத்துவிடக்கூடிய சூழல் உண்டாகும். இவ்வளவு நாட்கள் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். உங்கள் ராசிக்கு விரயச் சனி நடைபெற்றாலும் கடுமையான பாதிப்புகள் எதுவும் இருக்காது.

வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை பல அலைச்சல்களுக்கு பிறகு கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சொந்தம் கொண்டாடுவார்கள். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

உங்களின் உடல் ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியது வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவுயும் ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். தொழிலாளிகள், பணியலாளர்களின் திறமையாலும் ஒத்துழைப்பாலும் பல புதிய தொழில் ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும்.

பணியில் இது நாள் வரை நீங்கள் சுமந்த களங்கம் நீங்கி, உங்களுக்கு எதிர்பாராத பல நன்மைகள் ஏற்படும். புதிய இடங்களுக்கு பணிமாறுதல்கள் கிடைப்பதால் உங்களுக்கு பல அனுகூலங்கள் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமையும். புதிய நிலங்கள் வாங்கி அதிலும் விவசாயம் செய்து லாபத்தை அடைவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

நீங்கள் தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் வெற்றியை பெறுவீர்கள். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரங்களில் எதிரிபார்த்ததைவிட அதிக லாபங்களை பெற முடியும். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெறுவார்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும் சிலருக்கு உண்டாகும். சுப காரியங்களுக்கான பொருள் விரயம் சிலருக்கு ஏற்படும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறிது பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். வியாபாரகங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.வெளிநாட்டு வியாபார ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பணம் பிறருக்கு கடனாக வழங்கும் போது முன்னெச்சரிக்கை தேவை. எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். முன்கோபத்தன்மையை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். திருமண வயதுடைய பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களை ஓட்டும் போது அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனைகள் செய்வார்கள்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

வீண் விரயங்கள் அதிகம் ஏற்படும்.தொழில் வியாபாரங்களில் சில பிரச்சனைகள் தோன்றும். அவசரப்பட்டு வீடு, வாகனங்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. பிறருக்கு பணத்தை கடனாக கொடுக்க கூடாது. எதிர்பாரா இடங்களிலிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும். உறவினர்களின் வருகை உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

அதிகப்படியான பொருள் வரவு இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. பொன், பொருள், ஆபரணங்கள், வாகனம், வீடு, நிலம் போன்ற பலவற்றை வாங்கி குவிக்கும் பொருளாதார நிலை உண்டாகும். சிலர் உல்லாச பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு சமூகத்தால் பாராட்டப்படக்கூடிய அமைப்பும் ஏற்படும். சகோதரர்கள் வழியில் சுமூகமான உறவுகள் இருக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பிறர் விடயங்களில் தேவையில்லாமல் தலையிடுவது பிரச்சனைகளை கொண்டு வரும். தொழில் வியாபாரங்களில் சில வாய்ப்புகள் தாமதமாக கிடைத்தாலும் லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. மாணவர்களுக்கு கல்வியில் அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். சமுதாயத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு ஏழரை சனி நடப்பதால் சனிக்கிழமைகள் தோரும் திருப்பதி ஏழுமலையானுக்கு வழிபாடுகள் செய்வது நல்லது. அனுமன் மற்றும் விநாயகரையும் சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர வேண்டும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், சனியின் தீய பலன்களை போக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆடைகள் தானம் செய்வது சிறந்தது.

கும்பம்

தங்களது கடமையில் தவறாமல் இருக்கும் கும்ப ராசிக்காரர்களே 11-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் தொழில், வியாபாரம் மற்றும் உத்தியோகங்களில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தின் தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய முடியும். பிறருடன் பேசும் போது கவனமுடன் பேச வேண்டும். உங்களுடன் பணிபுரிபவர்களின் சதிச்செயல்களுக்கு ஆளாக நேரிடும். 13-02-2019 அன்று ஏற்படும் ராகு-கேது பெயர்ச்சிகளுக்கு பிறகு ஓரளவிற்கு அனுகூலமான பலன்களை பெற இயலும்.

பிறரை நம்பி பெரிய அளவிலான தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. அவ்வளவாக பரிட்சயம் இல்லாத நபர்களை பணியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அதிக காரம் இனிப்பு சம்பந்தமான உணவுகளை உண்ணக்கூடாது. குடும்பத்தில் பெரியவர்களுக்கு மனக்கவலைகள் அதிகம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள்.

காண்ட்ராக்ட், பங்கு வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடுமையாக உழைத்து உங்களுக்கான செல்வத்தை ஈட்டுவீர்கள். தொழில் வியாபாரங்களில் போட்டியாளர்களாலும், அரசாங்கத்தாலும் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். தொலைதூர பயணங்களால் வீண் பொருள் மற்றும் கால விரயம் ஏற்படும்.

உத்தியோகிஸ்தர்கள் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கேற்ற பலன்களை பெற முடியாது. சக ஊழியர்களின் உதவிகளும் தகுந்த நேரத்தில் கிடைக்காது. பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க கூடிய சூழ் நிலை ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் தங்களின் இருப்பை தக்க வைப்பதற்கே திண்டாடவேண்டியிருக்கும். விளைபொருட்களுக்கு தகுந்த விலை விவசாயிகளுக்கு கிடைக்காது. லாபம் ஓரளவுக்கே கிடைக்கும். கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் சக போட்டியாளர்களுக்கு சென்று விடும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவதால் பொருளாதார சிக்கலின்றி வாழலாம். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

புதிதாக தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் கடின முயற்சிகள் செய்து வெற்றியை பெறுவீர்கள்.. தொழில் வியாபாரங்களில் எதிரிபார்த்த லாபங்களை பெற முடியும். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெறுவார்கள். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் மறையும் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளில் பல தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். திருமண ஆகாத பெண்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். தொழில் வியாபாரங்களில் சராசரியான அளவிலேயே லாபங்கள் இருக்கும். மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களால் தன லாபம் கிடைக்கும். பொருள் வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். சக ஊழியர்களின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உறவினர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் எழலாம். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். எதிலும் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும் அவசரத்தன்மையை குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் கொள்வது அவசியம். வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் நீங்கி உங்களுக்கு அனைத்து நன்மைகளும் ஏற்படும். புதிய சொத்துகளை வாங்கும் போது பலமுறை யோசிப்பது நல்லது. பிறருக்கு பணத்தை கடனாக கொடுத்தால் திரும்ப வசூலிப்பதில் பிரச்சனைகள் உருவாகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து தக்க சமயத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

அதிகப்படியான பொருள் வரவு இருக்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். சிலர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். உடன் பிறந்தவர்களால் பொருளாதார ரீதியில் லாபம் கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

அவ்வப்போது உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பணியிடங்களில் உங்களின் பணியில் மட்டுமே கவனத்தை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரங்களில் பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைப்பதால் நல்ல லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்களும் பிரச்சனைகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு குருபகவான் 10 ஆம் இடத்தில் இருப்பதால் வியாழக்கிழமைகள் தோரும் குருபகவானுக்கு விரதமிருந்து அவரை வழிபடுவது நல்லது. மேலும் ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழ தீபமேற்றி வழிபடுவது நன்மையை தரும். ஆடைகள், தேன், நெய் போன்றவற்றை ஏழை பிராமணர்களுக்கு தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும். சரபேஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்வது நன்மை பயக்கும்.

மீனம்
எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து காட்டும் மீன ராசிக்காரர்களே, 11-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் குரு பெயர்ச்சியாகவிருப்பதால் கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களை விட்டு விலகி சென்றவர்களும் உங்களிடம் வலிய வந்து நட்பு பாராட்டும் நிலையை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

13-2-2019 அன்று ஏற்படும் ராகு – கேது பெயர்ச்சியால் சிலருக்கு அவ்வப்போது சிறு பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் உண்டானாலும் பெரிய அளவில் தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாது. உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது சிறந்தது. உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும்.குழந்தைகள் வழியில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி தருவீர்கள். கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்க டெண்டர், கான்ட்ராக்ட் போன்றவை கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது.

பணியிடங்களில் கெடுபிடியான உயரதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றமாகி செல்லக்கூடும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வும் ஊதிய உயர்வுகளையும் பெறுவீர்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும் நிலை உண்டாகும்.பொது வாழ்வில் உள்ளார்கள் தங்களின் எதிர்கட்சிகளை தங்களின் திறமையான செயல்பாடுகளால் ஸ்தம்பிக்க செய்வார்கள்.கட்சிகளில் உயர்ந்த பதவிகள் சிலருக்கு கிடைக்கும். விவாசியிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

பொருளாதார நிலை மேன்மையடையும். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளை பெறுவார்கள். தொழில் வியாபாரங்களில் சிறந்த லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும் வெளிநாட்டு பயணங்களால் நல்ல ஆதாயம் இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் தாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தில் அனைத்து தேவைகளும் பூர்த்தியடையும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

திருமண முயற்சிகள் வெற்றி பெற்று நல்ல முறையில் திருமணம் நடக்கும். தொழில் வியாபாரங்களில் சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். நண்பர்களால் பொருள்வரவு ஏற்படும். கொடுத்த கடன்களை சுமூகமாக வசூல் செய்ய முடியும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுவதுமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சங்களும் நிறைந்திருக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். எதிலும் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும் அவசரத்தன்மையை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களோடு உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் தீரும் .உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிப்படையும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

தொழில் வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் நீங்கி உங்களுக்கு நன்மைகளும் ஏற்படும். புதிய சொத்துகளை வாங்கும் போது பலமுறை யோசிப்பது நல்லது. ஆடம்பர செலவுகள் செய்வதை ததவிர்க்க வேண்டும். பிறருக்கு கடனாக கொடுத்த பணம் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். சுப காரிய முயற்சிகளுக்கான பொருள் விரயம் சிலருக்கு ஏற்படும். குழந்தைகள் வழியில் சிலருக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

சராசரியான அளவில் தடையின்றி பொருள் வரவு இருக்கும். தொழில் வியாபார காரணங்களால் சிலருக்கு கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சிலர் வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் யோகம் ஏற்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவார்கள். உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களோடு ஒற்றுமை நிலவும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2018 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். அடிக்கடி உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பணியிடங்களில் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரங்களில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் நல்ல லாபத்தை பெற முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பூர்வீக சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அவை உங்களை வந்தடையும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வடைமாலை சாற்றி வழிபட்டு வருவது நல்லது. மேலும் சனிக்கிழமையில் திருப்பதி திருமலை வெங்கடாசலபதியை வழிபடுவதும் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். ஏழைகளுக்கும், துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானங்கள் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும். துர்க்கையையும் விநாயகரையும் வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.

மேஷம் முதல் துலாம் வரையிலான ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமஹா குருப்பெயர்ச்சி – கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்?
Next articleஇன்றைய ராசிப்பலன் – 26.09.2018 புரட்டாசி 10, புதன்கிழமை !