காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ ரசம் செய்வது எப்படி! உடல் வலி, சளி, காச்சல் ஓடிவிடும்!

0

உடல் வலி, காய்ச்சல், சளி வந்தவர்களுக்கும் ஏற்றது இந்த மருந்து ரசம். இதை செய்வது மிகவும் எளிமையானது.

கீழாநெல்லியை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

கீழாநெல்லி,
மிளகுப்பொடி,
பனங்கற்கண்டு.

கீழாநெல்லியின் இலை, தண்டு, காய் உள்ளிட்டவற்றை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என உணவுக்கு முன்பு 5 நாட்கள் வரை குடித்துவர காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் ஏற்படும் உடல் வலி, வாய் கசப்பு சரியாகும்.

கீழாநெல்லி ஈரல் நோய்களுக்கு முக்கிய மருந்தாக விளங்குகிறது. மஞ்சள் காமாலையை போக்க கூடியது. எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் கீழாநெல்லி தேனீரை எடுக்கலாம்.

நிலவேம்பை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

அதிமதுரப் பொடி, சுக்குப்பொடி, சீரகம். கால் ஸ்பூன் அதிமதுர பொடி, கால் ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிது சீரகம் ஆகியவற்றுடன் நிலவேம்புவின் இலை, தண்டு போன்றவை ஒருபிடி அளவுக்கு சேர்க்கவும்.

இதனுடன் ஒருபிடி அளவுக்கு பற்பாடகம் இலை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது தினமும் இருவேளை குடித்துவர காய்ச்சல் குணமாகும். இதை பெரியவர்கள் 50 மில்லி வரை எடுக்கலாம்.

இதை குடித்துவர காய்ச்சல் குறையும், உடல் வலி, வாய் கசப்பு, வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

மிகுந்த கசப்பு சுவையுடைய நிலவேம்பு காய்ச்சலை குணப்படுத்த கூடிய தன்மை கொண்டது.

துளசி இலையை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

துளசி, மிளகுப்பொடி. துளசி இலைகளை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சம அளவு மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதை சுண்டைக்காய் அளவுக்கு உருண்டைகள் செய்து வெயிலில் காய வைக்கும்போது மிளகு அளவுக்கு வரும். காலை, மாலை, இரவு வேளைகளில் தலா 2 மாத்திரைகள் சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

கண்டந் திப்பிலி குச்சிகள் – 6 (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

பூண்டு – 4 பல்

புளி – நெல்லிகாய் அளவு

துவரம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

தனியா – ஒரு டீஸ்பூன்

மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

மிளகாய் – வற்றல் 2

சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கடுகு – கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவைக்கு

நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வெறும் வாணலியில் கண்டந் திப்பிலி, துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

புளிக்கரைசலுடன் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போன பிறகு சுக்குத்தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும் போது இறக்கவும்.

வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித் தழை தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும். இதனை சூப் போலவும் குடிக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிந்து முந்துவதை தடுத்து, மன்மதனாக மாற்றும் இந்த அற்புத காய் பற்றி தெரியுமா?
Next articleமூட்டுவலிக்கு நிவாரணம் தரும் கண்டந்திப்பிலி ரசம்!