மனைவி என நினைத்து வேறு பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பிய நபர்! அந்த பெண்ணையே காதலித்து மணந்த சுவாரசியம்!

0

பிரித்தானியாவில் மனைவி செல்போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்புவதாக நினைத்து வேறு பெண்ணுக்கு நபர் ஒருவர் மெசேஜ் அனுப்பிய நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பீட்டர் மோட்டகர்ட் என்பவருக்கு தற்போது 46 வயதாகிறது. இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு பீட்டர் தனது மனைவிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்ப நினைத்தார்.

ஆனால் செல்போன் நம்பரின் ஒரு எண்ணை மட்டும் அவர் தவறுதலாக மாற்றி அனுப்பிய நிலையில் மெசேஜ், மேரி என்ற பெண்ணுக்கு சென்றது.

தொடர்ந்து மூன்று மெசேஜ்களை பீட்டர் அனுப்பிய நிலையில், நீங்கள் யார்? எனக்கு தவறுதலாக மெசேஜ் அனுப்புகிறீர்கள் என மேரி மெசேஜ் மூலம் தெரிவித்தார்.

பின்னரே பீட்டர் தனது தவறை உணர்ந்தார். ஆனால் இதன்பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களானர்கள்.

இவர்களின் நட்புக்கு பீட்டரின் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் மேரி தனது கணவருடன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற பீட்டர் அங்கு சில வாரங்கள் தங்கினார். அந்த சமயத்தில் மேரிக்கும் அவர் கணவருக்கும் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இதன்பின்னர் பீட்டர் தனது வீட்டுக்கு திரும்பி வந்த நிலையில் மேரி தனது தோழியுடன் தங்கினார்.

இதையடுத்து கடந்த 2006-ல் பீட்டரும், மேரியும் காதலிக்க ஆரம்பித்து ஒன்றாக ஒரே வீட்டில் தங்க தொடங்கினார்கள்.

தற்போது பீட்டருக்கு 46 வயதாகும் நிலையில், மேரிக்கு 60 வயதாகிறது. தன்னை விட 14 வயது மூத்த பெண்ணான மேரியை கடந்த 2017-ல் பீட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து தம்பதி கூறுகையில், அதிர்ஷ்டம் தான் எங்களை இணைத்தது என கூறவேண்டும்.

இருவருக்குமே 2003 காலக்கட்டத்தில் எங்கள் துணையுடன் பிரச்சனை இருந்தது. அந்த நேரத்தில் வந்த மெசேஜ் தான் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய அரசியல்வாதிகள் காமராஜரின் காலில் விழந்து வணங்கவேண்டும்! இளையராஜாவின் பகீர் பதில்!
Next articleபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு குவியும் வாழ்த்துக்கள்! என்ன ஸ்பெஷல் தெரியுமா! புகைப்படம் இதோ!