சீனாவில் மனைவி என நினைத்து மதுபோதையில் மகளை கர்பிணியாக்கிய தந்தையை மன்னித்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத YCK (59) என்பவர் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு மார்ச் 22ம் திகதி மது போதையில் வீடு திரும்பியிருக்கிறார்.
அப்பொழுது மனைவி என நினைத்துக்கொண்டு 15 வயது மகளை துஸ்பிரயோகம் செய்துள்ளார். அதிகமான மது போதையில் இருந்ததால் அவரை தடுக்க முடியாமல் மகள் திணறியுள்ளார்.
இதில் அந்த சிறுமியும் கர்பமடைந்திருக்கிறார். இந்த சம்பவத்தை அறிந்துகொண்ட சமூக நல ஆர்வலர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சிறுமியின் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் அங்கு யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், தன்னுடைய தந்தையை அந்த சிறுமி மன்னித்து விடுவதாக கூறியுள்ளார்.
மாறாக தன்னுடைய அனுமதியின்றி வழக்கு தொடர்ந்த சமூகநல ஆர்வலர் மீது கடும் கோபமடைந்துள்ளார். அவர் தன்னுடைய குடும்பத்தை பிரிக்க நினைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேசமயம், மது போதையில் இருந்ததால் தான் என்னுடைய மனைவி என நினைத்து மகளிடம் தவறாக நடந்துகொண்டேன் என சிறுமியின் தந்தை தன்னுடைய தவறுக்கு வருந்தியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்த்திர்க்காத நீதிபதி, ஒருபுறம் மகள் மணிப்பதாக கூறுவதும், மறுபுறம் தவறுக்கு வருந்துவதாக தந்தை கூறுவதையும் கேட்டு குழப்பமடைந்துள்ளார். பின்னர் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டிய இடத்தில் 2 ஆண்டுகள் 6 மாதங்கள் மட்டும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அப்போது பேசிய நீதிபதிகள் குழுவின் உறுப்பினர் அமண்டா உட்காக், இது விசித்திரமான உண்மையுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு வழக்கு என கூறினார்.