மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள்.
இந்த நோயின் மூலம் பாதிப்படைந்தவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் அடிக்கடி தென்படும். அதோடு மட்டுமில்லாமல், கண்கள் மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறமாக மாற்ற அடையும்.
மஞ்சள் காமலை நோயை குணப்படுத்தும் வழிகள்?
- வேப்பிலையை அரைத்து ஜூஸ் செய்து, அதில் பாதியளவு தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், கல்லீரல் சேதமடைவதை தடுத்து, மஞ்சள் காமாலை நோயை குணமாக்க உதவுகிறது.
- எலுமிச்சை பழத்தின் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள விட்டமின் C, கல்லீரலில் ஏற்படும் பாதிப்பை தடுத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மருந்து கடையில் கிடைக்கும் அர்ஜுனா பவுடர் மற்றும் சிறிதளவு நெய் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வர வேண்டும். இதனால் இதயம், சிறுநீர் மற்றும் மஞ்சள் காமாலை பிரச்சனை குணமாகவும், கல்லீரலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது.
- மஞ்சள் காமாலைக்கு மஞ்சள் மருந்தாக பயன்படுகிறது. எனவே மஞ்சளை ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள தண்ணீரில் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- தக்காளி ஜூஸை காலையில் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளை குறைத்து, மஞ்சள் காமாலை நோயை குணமாக்க உதவுகிறது.
- முள்ளங்கியின் இலைகளை சுத்தமாக கழுவி, ஜூஸ் செய்து தினமும் ஒருமுறை என்று தொடர்ந்து குடித்து வந்தால், கல்லீரலில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, 10 நாட்களில் மஞ்சள் காமாலையை குணமாக்கிவிடும்.
குறிப்பு
மஞ்சள் காமாலை உள்ளவர்கள், எண்ணெய் உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: