பெற்ற குழந்தைகளை துடிக்க துடிக்க கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஒப்பாரி வைத்த தாய்! அதிர்ச்சியில் உறவினர்கள்!

0

கொலைகள் தற்கொலைகள் என்பதற்கு இந்தியாவை பொறுத்த வரை சாதாரண விடயமாகி உள்ளது. யார் எப்போது யாரை கொலை செய்வார்கள் என்ற பயம் மனதில் நிறைந்துள்ளது. அப்படி பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஒப்பாரி வைத்து அழுத சம்பவம் இன்று கப்பலூர் பாதிரிகுப்பத்தில் நடந்துள்ளது. காதலித்து திருமணம் செய்த தம்பதிகளான மதிவாணன் மற்றும் சிவ சங்கரிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் கண் பட்டாது போல் தினமும் சண்டை வந்துள்ளது. நேற்றைய தினம் சண்டை அதிகமாக மதிவாணன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வழமையாக சண்டை வந்தால் மதிவாணன் வெளியேறி விடுவார். அன்றும் அப்படி இரவு நேரத்தில் வெளியே சென்றுள்ளார். கணவன் வெளியே சென்றதும் சிவசங்கரி தனது இரண்டு மகன்களுக்கும் ( பாவேஷ் கண்ணா 12. ரதீஸ் கண்ணா 8 ) தூக்க மாத்திரை போட்டு கொடுத்துள்ளார்.

இருவரும் மயங்கியதும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு. அவர்களுக்கு நல்ல ஆடை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஒப்பரி வைத்து அழுதுள்ளார். அடுத்த வீட்டில் உள்ளவர்களுக்கு சத்தம் கேட்ட போதும் கணவன் மனைவி சண்டையில் அழுவதாக நினைத்துள்ளனர்.

நீண்ட நேரத்தின் பின் வீட்டிற்கு வந்து கதவை கட்டிய மதிவாணனுக்கு சந்தேகம் வந்துள்ளது. வழக்கமாக கோபித்துக் கொண்டு போனால் சிவசங்கரி உறக்க மாட்டர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் பக்கத்து வீட்டார்களும் கூடி உள்ளனர்.

பின் கதவை திறந்த போது சிவசங்கரி தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளார். அவர் அனைவருக்கும் கடிதம் எழுதி வைத்துள்ளார். என் கணவர் பொறுமை சாலி, அதனால் என்னுடன் வாழ்கிறார். என்னால் கோபபடாமல் இருக்க முடியவில்லை.

என் கணவருக்கு நானோ குழந்தைகளோ இனி தொந்தரவு கொடுக்க மாட்டோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தை முடித்துள்ளார். ஆனாலும் சிவசங்கரி யின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளதால் பொலீஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்..!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதெறிக்கவிட்ட கிறிஸ் கெய்ல்! மற்றுமொரு உலக சாதனை!
Next articleவிஜய் பாடலுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்!