பிரித்தானியாவில் பெண்ணுடன் உறவில் ஈடுபட்டிருக்கும் போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
East Yorkshire-ஐ சேர்ந்தவர் லவுரா ஹுடிசன் (21). இவர் ஜேசன் கேஸ்கெல் (24) என்ற இளைஞருடன் கடந்த பிப்ரவரி மாதம் உறவு வைத்து கொண்டார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லவுராவை ஜேசன் குத்தி கொலை செய்தார்.
இதையடுத்து பொலிசார் ஜேசனை கைது செய்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால் ஜேசனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, லவுராவின் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அதிருப்தியடைய செய்துள்ளது.
லவுராவின் தோழி ஹரான் கூறுகையில், இது போல குற்றத்தை செய்தவர்களுக்கு இவ்வளவு சிறிய தண்டனை கொடுத்தது எப்படி நியாயமாக இருக்கும்.
சிறையில் இருந்து வெளியில் வந்து ஜேசன் இது போன்ற தவறை மீண்டும் செய்தால் என்ன செய்வீர்கள் என கேள்வியெப்பியுள்ளார்.
லவுராவின் குடும்பத்தார் கூறுகையில், லவுரா எங்களை விட்டு மறைந்தது மிகுந்த வேதனை தருகிறது.
லவுராவின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தவனை மீண்டும் வாழ அனுமதிப்பது தான் சட்டமா?
எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.