இந்த நீரை அருந்துவதால் பெண்களின் குடும்ப வாழ்க்கை சிறப்படையும்!

0

சோம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வளிக்கும். அதிலும் இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால், பல்வேறு உடல் உபாதைகளால் அவஸ்தைப்பட நேரிடுவதால், சோம்பு கொண்டு தேநீர் தயாரித்து தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது.

சோம்புவை டீ தயாரித்து குடல் மற்றும் உடலின் இதர பகுதிகளில் ஏற்படும் பிடிப்புக்கள் குறையும். உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால், முதலில் உடலில் உள்ள பிடிப்புக்களைக் குறைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

அஜீரண கோளாறுகளை சரிசெய்யும். குறிப்பாக நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், சோம்பு டீ குடிக்க விரைவில் குணமாகும். வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். இதற்கு சோம்பினுள் உள்ள உட்பொருட்கள் தான் முக்கிய காரணம்.

சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் கால பிரச்சனைகளைக் குறைக்கும். மேலும் இது பெண்களின் உண(ர்வை)த் தூண்டி, வாழ்க்கையை செழிப்பாக்கும். முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சோம்பு நீரைக் குடிப்பது மிகவும் நல்லது.

சோம்பு உடலில் உள்ள அசிடிட்டியின் அளவைக் குறைக்கும். குறிப்பாக இது உடலினுள் இருக்கும் புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கும். மேலும் சோம்பு தேநீர் ஒரு சிறுநீர் பெருக்கியாகும். இந்த டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சிறுநீரக பிரச்சனைகள் வருவது குறையும். இது ஆர்த்ரிடிஸ் மற்றும் மூட்டு வலிகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளைக் குறைக்க உதவும். ஒருவேளை இரத்த அழுத்தத்திற்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் குடியுங்கள்.

சோம்பு டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும். ஆகவே எடையை வேகமாக குறைக்க நினைத்தால், சோம்பு டீயைக் குடியுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசிப்பலன் – ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை!
Next articleஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன்! காதலியை தேவைக்காக பயன்படுத்திக்கொண்ட காதலன்!