புற்றுநோய், மாரடைப்பைத் தடுத்து நிறுத்தும் பழம், காய்கறிகள் பட்டியல்!

0

தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு பெரும் பாதி்பபை ஏற்படுத்கக் கூடிய புற்றுநோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை சரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இம்மாதிரியான உணவுப் பழக்கம், ஒரு வருடத்திற்கு 7.8 மில்லியன் ஆயுட்காலம் முன்னதாகவே வரும் இறப்பை தடுப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்தை தடுக்கும் குறிப்பிட்ட பழம் மற்றும் காய்கறியையும் அந்த குழு கண்டறிந்துள்ளது.

சிறிய அளவு பழங்களை உட்கொள்வதே உடலுக்கு நலத்தை அளிக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பங்கு என்பது 80 கிராம் பழம் அல்லது காய்கறியை குறிக்கும். அது ஒரு சிறிய வாழைப்பழம், ஒரு பேரிக்காய் அல்லது மூன்று தேக்கரண்டி பசலைக்கீரை அல்லது பட்டாணியை குறிக்கும்.

இரண்டு மில்லியன் மக்களின் உணவு பழக்கங்களை கொண்டு சேகரித்த தகவல்கள், 95 வித ஆய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கும் உணவுகள்:

பச்சைக் காய்கறி
மஞ்சள் நிற உணவுகள்
காலிஃப்ளவர் போன்றவை
இதய நோய் மற்றும் வாத நோயை தடுக்கும் உணவுகள்:

ஆப்பிள்கள்
எலுமிச்சை, சாத்துக்குடி
பழம் மற்றும் காய்கறிகளின் கலவைகள்
பச்சை இலை காய்கறிகள்
காலிஃபளவர் காய்கறிகள்
சர்வதேச தொற்றுநோய் குறித்த பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவில், ஆயுட்காலத்திற்கு முன்பாகவே இறக்கும் ஆபத்து குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

எவ்வளவு பழம், காய்கறி சாப்பிட்டால் ஆபத்து எவ்வளவு குறையும்?

•200 கிராம், 13 சதவீதம் வரை இதய நோய் ஆபத்தை குறைக்கிறது; மேலும் 800கிராம், 28 சதவீதம் வரை குறைக்கிறது.

•200 கிராம் 4 சதவீத அளவில் புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது மேலும் 800 கிராம் 13 சதவீத அளவில் குறைக்கிறது.

•200 கிராம், ஆயுட்காலம் முடியுமுன் வரக்கூடிய இறப்பை 15 சதவீத அளவு குறைக்கிறது; மேலும் 800 கிராம் 31 சதவீத அளவில் குறைக்கிறது.

ஆய்வு செய்வதற்கு குறைந்த ஆதாரங்களே உள்ளதால் இதற்கும் அதிகமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் மேலும் அதிகமான ஆரோக்கிய பயன்கள் கிடைக்குமா என்பது ஆய்வாளர்களுக்கு தெரியவில்லை.

•பழங்கள் மற்றும் காய்கறிகள், கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கிறது மேலும் ரத்த நாளங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது என ஆய்வாளர்களில் ஒருவரான டாக்ஃபின் ஒனா தெரிவிக்கிறார்.

•பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகப்படியான ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளதால் டிஎன்ஏ சேதங்களை குறைத்து புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.

•உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 400 கிராம் பழம் மற்றும் காய்கறிகளை மக்கள் சரியான அளவில் உட்கொள்வதில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகருப்பா இருக்கும் உங்கள் முழங்கையை வெள்ளையாக்க சில டிப்ஸ்!
Next articleதரையில் அமர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்!என்பது உங்களுக்கு தெரியுமா!