குறிப்பிட்ட புரதச்சத்தை குறைத்து சாப்பிட்டு வந்தால், எந்தவித உணவுக் கட்டுப்பாடும் இல்லாமலே நலமாக வாழலாம் என்று லண்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.
பழப்பூச்சிகளை ஆய்வு செய்ததில் மீதையோனின் என்னும் ரசாயனம் நலவாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது தெரிய வந்தது. எலிகளை ஆய்வு செய்ததிலும் இதே முடிவு கிடைத்தது.
இதையடுத்து இந்த ரசாயனத்தை கட்டுப்படுத்தியும், புரதச் சத்தை குறைத்து குறைந்த கலோரி உணவையும் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டதில் வயது மூப்படையும் தன்மை குறைவாக இருப்பது கண்பிடிக்கப்பட்டது.
எனவே நலவாழ்வை விரும்புபவர்கள் சைவ உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அசைவ விரும்புகள் தேவைப்பட்டால் மீன் வகைகளை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள் ஆறுதல் கூறுகிறார்கள்.
எப்படியும் அசைவமும், சைவமும் உணவு வகைகளில் முக்கியமானவைதானே.