புத்தாண்டு பலன் – 2019 மேஷம்!

0

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, எதிலும் தைரியம் துணிவுடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடையும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் பாக்கிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும் என்றாலும் பூர்வீக சொத்துக்களாலும், தந்தை வழி உறவுகளாலும் சில மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு பண உதவி செய்வது முன் ஜாமீன் அளிப்பது போன்றவற்றினை தவிர்க்கவும். வரும் 07.03.2019-ல் ஏற்பட இருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.

திருமண சம்மந்தப்பட்ட விஷயங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். அரசாங்க வழியில் நீங்கள் தேவையில்லாத நெருக்கடியினை சந்திர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வீண் பழி சுமத்த கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளிவட்டாரங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் அவ்வளவு சீக்கிரமாக கிடைக்காது. இந்த வருட கடைசியில் 5.11.2019-ல் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் எல்லா பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். மனைவிக்கு வயிற்று வலி, மாதவிடாய் பிரச்சினைகள் உண்டாகும். புத்திர வழியில் ஜல தொடர்புடைய பாதிப்புகளாலும், உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, நேரத்திற்கு உணவு உண்பது போன்றவற்றால் நற்பலன்களை அடைய முடியும்.

குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மன அமைதி குறையும். உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாரத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். பொறுப்புகள் அதிகமாகி அதிக நேரம் பணிபுரிய வேண்டி வரும். உடல் நிலை சோர்வடையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் சற்று சிரமபட்டாலும் சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக போராட்டங்களை சந்திக்க நேரிட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். மறைமுக எதிரிகளால் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கூட்டாளிகளே போட்டிகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் முதலியவற்றில் ஈடுபடுபவர்கள் நிதானமாக செல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் வீண் விரயமும், கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பிரச்சினைகளும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பண வரவுகளும் தாமதப்படும். வம்பு, வழக்குகள் சற்று இழுபறி நிலையில் இருக்கும்.

அரசியல்
அரசியல்வாதிகளுக்கு புகழ், பெருமை மங்ககூடிய காலம் என்பதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவது நல்லது. உடன் இருப்பவர்களே கெடுதிகளை ஏற்படுத்துவார்கள். எடுக்கும் காரியங்களை சரி வர செய்து முடிக்க முடியாமல் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

விவசாயிகள்
விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் ஓரளவுக்கு கிடைக்கும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டு என்றாலும் சில தடைகளுக்கு பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் லாபம் கிட்டும். கடன்களை அடைக்க கூடிய அளவிற்கு ஆற்றலும் உண்டாகும்.

கலைஞர்கள்
தொழிலில் நிறைய போட்டிகள் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாகவே இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நத்தமம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனும் உடல் நல கோளாறுகளும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிட்டும். உடனிருக்கும் கலைஞர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏறப்படுத்துவார்கள்.

பெண்கள்
குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். என்றாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் ஏற்படாது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூரம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும். உடல் நிலையில் பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். பணி புரியும் பெண்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும்.

மாணவ- மாணவியர்
எவ்வளவு தான் கஷ்டப்பட்டு படித்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற இடையூறு ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் நிதானம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைப்பது நல்லது.

ஜனவரி
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதும் ராசிக்கு 8-ல் குரு, சுக்கிரன், சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 02-01-2019 அதிகாலை 03.23 மணி முதல் 04-01-2019 பகல் 12.54 மணி வரை மற்றும் 29-01-2019 காலை 08.59 மணி முதல் 31-01-2019 மாலை 06.40 மணி வரை.

பிப்ரவரி
உங்கள் ஜென்ம ராசிக்கு 10, 11-ல் புதன், சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் சற்று விலகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 25-02-2019 மாலை 04.42 மணி முதல் 28-02-2019 அதிகாலை 00.46 மணி வரை.

மார்ச்
உங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான சூரியன் இம்மாத முற்பாதி வரையில் 11-ல் சஞ்சாரம் செய்வதும், 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பதும் சுமாரான நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் தாராளமாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளால் சிறு விரயம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 25-03-2019 அதிகாலை 01.08 மணி முதல் 27-03-2019 காலை 08.19 மணி வரை.

ஏப்ரல்
ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும், இம்மாதம் அதிசாரமாக குரு 9-ல் தனுசு ராசியில் 23-ஆம் தேதி வரை சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்படலாம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். சனிபகவானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 21-04-2019 பகல் 11.10 மணி முதல் 23-04-2019 மாலை 05.14 மணி வரை.

மே
ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும், 7-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் இம்மாதம் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 18-05-2019 இரவு 08.30 மணி முதல் 21-05-2019 அதிகாலை 02.30 மணி வரை.

ஜுன்
இம்மாதம் 3-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதாலும், மாதபிற்பாதியில் சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.

ஜுலை
உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும், மாதமுற்பாதியில் சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் சற்று குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்பட்டு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.

ஆகஸ்ட்
இம்மாதம் 3-ல் ராகு, 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. அசையா சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 08-08-2019 மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.

செப்டம்பர்
உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனம் தேவை. முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 04-09-2019 இரவு 10.15 மணி முதல் 07-09-2019 அதிகாலை 04.55 மணி வரை.

அக்டோபர்
உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 02-10-2019 காலை 07.10 மணி முதல் 04-10-2019 பகல் 12.20 மணி வரை மற்றும் 29-10-2019 மாலை 05.35 மணி முதல் 31-10-2019 இரவு 09.30 மணி வரை.

நவம்பர்
ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் ராகு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். பண வரவுகளில் சரளமான நிலையிருக்கும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 26-11-2019 அதிகாலை 03.45 மணி முதல் 28-11-2019 காலை 07.35 மணி வரை.

டிசம்பர்
ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 23-12-2019 பகல் 11.50 மணி முதல் 25-12-2019 மாலை 04.40 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9,
நிறம் – ஆழ் சிவப்பு
கிழமை – செவ்வாய்
கல் – பவளம்
திசை – தெற்கு
தெய்வம் – முருகன்

புத்தாண்டு பலன் – 2019 ரிஷபம்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 27.12.2018 வியாழக்கிழமை!
Next articleஇன்றைய ராசிப்பலன் வெள்ளிக்கிழமை – 28.12.2018