புத்தாண்டு பலன் – 2019 தனுசு!

0

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசுராசி நேயர்களே சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்பவராகவும் கள்ளம் கபடமின்றி உண்மையாக பழகுபவராகவும் உள்ள உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுவதும், உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தலை வலி, சோர்வு போன்றவை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும்.

நெருங்கியவர்களுக்கும் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். வரும் 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும்.

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படுவதோடு எதிர்பார்த்தபடி நல்ல வரன்களும் அமையாது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய கூடும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டே லாபங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் அவ்வப்போது தோன்றினாலும் எதையும் சமாளித்து சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது அலைச்சலைக் குறைக்கும். எடுக்கும் முயற்சிகளில் போட்டிகள் நிலவுவதால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது தக்க சமயத்தில் உதவிகரமாக அமையும்.

குடும்பம் பொருளாதாரநிலை
உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதாரநிலை திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின்பே நற்பலனை அடைய முடியும். புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு உதவிகரமாக அமையும். புதிய வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

உத்தியோகம்
பணியில் பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூடுதல் பொறுப்புகள் அதிகமாவதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி விடுப்பு எடுக்க நேரிடும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைப்பதால் எதையும் முடிந்த அளவு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிட்டாலும் வாய்ப்புகள் தடைபடாது. எதிர்பார்த்த உதவிகள் தாமதத்திற்குப் பின் கிட்டும். அரசு வழியில் அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபங்களை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் அபிவிருத்தினை பெருக்க முடியும்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும், முன் ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பதால் நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களையும் வசூலிக்க சற்று இழுபறி நிலை ஏற்படும். வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாது. வம்பு வழக்குகளில் தீர்ப்பு தாமதப்படும்.

அரசியல்
அரசியல்வாதிகளின் பெயர் புகழுக்கு களங்கம் வரக்கூடும் என்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடு பட்டாவது காப்பாற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். அமைச்சர்களின் கெடுபிடிகள் சற்று அதிகரிக்கும்.

விவசாயிகள்
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் இருக்காது. புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய், கனி, பூ வகைகள் மூலம் ஒரளவுக்கு லாபங்களைப் பெற முடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் சுமாரான லாபம் கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூட தாமதநிலை ஏற்படும்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் புதிய வாய்ப்புகள் தாமதப்படும். எவ்வளவு முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த வசூலை பெற முடியாமல் படங்கள் பாதிப்பு அடையும். ரசிகர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

பெண்கள்
பெண்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலையே உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் சிறப்பாகவே அமையும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் மனநிம்மதி குறைவு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் நிம்மதியானநிலை இருக்கும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் கவனம் செலுத்த முடியாதபடி மந்த நிலை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உண்டாகும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

ஜனவரி.
ஜென்ம ராசியில் சனி, சூரியன் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக அமையாது. அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மந்தநிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனம் தேவை. அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் படிப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 21-01-2019 அதிகாலை 00.05 மணி முதல் 22-01-2019 இரவு 11.32 மணி வரை.

பிப்ரவரி
ஜென்ம ராசியில் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாதபிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயன்று படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 17-02-2019 பகல் 11.24 மணி முதல் 19-02-2019 பகல் 11.03 மணி வரை.

மார்ச்
ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். 7-ஆம் தேதி முதல் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சாரம் செய்ய இருப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்ச¬ல்களை குறைத்து கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 16-03-2019 இரவு 08.38 மணி முதல் 18-03-2019 இரவு 09.45 மணி வரை

ஏப்ரல்
ஏழரைசனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களிலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதில் தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். ராகு கேது வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.

மே
இம்மாதம் 4, 5-ல் புதன், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலையே இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 10-05-2019 காலை 08.35 மணி முதல் 12-05-2019 பகல் 11.53 மணி வரை.

ஜுன்
இம்மாதம் மாதமுற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.

ஜுலை
உங்களுக்கு ஜென்ம சனி நடைபெறுவதாலும், 7-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்யவும்-.
சந்திராஷ்டமம் – 03-07-2019 இரவு 11.10 மணி முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை மற்றும் 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.

ஆகஸ்ட்
ஜென்மசனி நடைபெறுவதும், 7-ல் ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைபப் பெற முடியும். சிவ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 27-08-2019 இரவு 07.40 மணி முதல் 29-08-2019 இரவு 08.10 மணி வரை.

செப்டம்பர்
ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு 12-ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உற்சாகமின்மை போன்றவை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மாதபிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 24-09-2019 அதிகாலை 04.50 மணி முதல் 26-09-2019 காலை 06.40 மணி வரை.

அக்டோபர்
ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாய் 10, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 21-10-2019 பகல் 11.40 மணி முதல் 23-10-2019 மாலை 03.15 மணி வரை.

நவம்பர்
இம்மாதம் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் பூமி மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். 5-ஆம் தேதி முதல் குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பல பெரிய மனிதர்களின் உதவி கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 17-11-2019 மாலை 05.05 மணி முதல் 19-11-2019 இரவு 09.20 மணி வரை.

டிசம்பர்
ஜென்மசனி நடைபெறுவதும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 14-12-2019 இரவு 11.15 மணி முதல் 17-12-2019 அதிகாலை 02.45 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் -1,2,3,9
நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை – செவ்வாய், வியாழன்
திசை – தெற்கு
கல் – பவளம்
தெய்வம்- முருகன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டு பலன் – 2019 துலாம்!
Next articleபுத்தாண்டு பலன் – 2019 மகரம்!