பிரித்தானிய இளவரசர் ஜார்ஜை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ஐஸ் தீவிரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியின் மூத்த மகன் ஜார்ஜ் தென்மேற்கு லண்டனில் உள்ள பள்ளி கூடத்தில் பயின்று வருகிறார்.
இந்த நிலையில், இங்கிலாந்தின் லன்காஷைர் நகரில் நெல்சன் பகுதியை சேர்ந்த உஸ்னைன் ரஷீத் என்பவர், கடந்த அக்டோபரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் குழு சாட்டிங்கில் ஈடுபட்டு உள்ளார்.
அதில், இளவரசர் ஜார்ஜை கொல்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து ஜார்ஜின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் இளவரசருடன் இரண்டு முகமூடி அணிந்த ஜிகாதி போராளிகள் இருப்பது போன்று வடிவமைத்து உள்ளார்.
தொடர்ந்து, அரச குடும்பம் கூட விட்டு வைக்கப்படாது என்றும் இளவரசரை கொல்ல வேண்டும் அதில் பதிவிட்டுள்ளதுடன், பள்ளிக்கூடம் விரைவில் தொடங்குகிறது என்றும் ரகசிய உரையாடல் நடந்துள்ளது.
இதனை தொடர்ந்து பொலிசார் ரஷீத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயார் செய்வது மற்றும் தீவிரவாதத்தினை ஊக்குவிப்பது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரஷீத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.