பிரிட்டனில் குடிபோதையில் அக்காவின் திருமணத்தில் சுற்றி திரிந்த தங்கை கைது!

0

பிரிட்டனில் அக்காவின் திருமணத்தின் போது தங்கை ஒருவர் குடித்துவிட்டு கலாட்டா செய்ததால் பொலிஸார் உடனே அவரை கைது செய்தனர்.

பிரிட்டன் நாட்டின் தம்பதியினரின் மூத்த பெண் ஒருவருக்கு வெகு விமர்சையாக திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, திருமண நிகழ்விற்கு வந்த உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டிருந்ததனர்.

அந்த வேளையில், சற்றும் எதிர்பார்த்த நிகழ்வாக மணமகளின் தங்கை ஒருவர் செம போதையில் வந்து ரகளையில் ஈடுபட்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகளின் வீட்டார் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரை போதையில் அந்த பெண் காலால் எட்டி உதைத்துள்ளார்.

இதையடுத்து, அந்த போதை பெண்மணியை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர். போதை தெளிந்த பிறகு அந்த பெண் பொலிஸாரிடம் மன்னிப்பு கேட்டார்.

பின்னர், அந்த பெண்ணை எச்சரித்த பொலிஸார் அபராதங்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜாமீனில் எடுக்க கெஞ்சி கதறும் அபிராமி! சீண்டாத சொந்த பந்தங்கள்!
Next articleவியக்க வைக்கும் பிரமாண்ட காணொளி! பிரம்மாண்டமாக இத்தாலியில் நடந்த முகேஷ் அம்பானி மகள் நிச்சயதார்த்தம்!