பிரான்ஸில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்கப்புதையல்கள் ஏராளமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தார்கள்.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடுதலாக ஆய்வுப் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டன.
அப்போது ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்த 70 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் அந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.
இதோடு மேலும் பல ஆபரணங்களும் அதில் இருந்தன.
இந்த தங்கப்புதையலின் மொத்த மதிப்பு £10 மில்லியன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: