பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய மோகன் வைத்தியா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் எனக்கு தர்ஷன், முகேன் இருவரையும் ரொம்ப பிடிக்கும். ஏனெனில் அவர்கள் அவ்வளவு கஷ்டத்தில் வளர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி தர்ஷனை எனது வளர்ப்பு மகனாக ஏற்று கொண்டேன்.
ஒரு முறை விளையாட்டாக பேசி கொண்டிருந்த போது, முகேன் ஏதோ என்னை கிண்டல் செய்யும் விதமாக பேசிவிட்டான். இதனால் நான் சற்று கோபமடைய, உடனே அவன் ஸ்மோக்கிங் ஏரியாவிற்கு சென்று சிகரெட் பிடித்துவிட்டு வந்து மன்னிப்பு கேட்டான் என்றார்.
லொஸ்லியா வீட்டில் உண்மையில் எப்படி இருப்பார்? என கேட்டதற்கு ஒரே வார்த்தையில், நோ கமெண்ட்ஸ் என சொல்லி முடித்தார், மோகன் வைத்தியா.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: