பாரிச வாயு எனும் பக்கவாதத்தை குணப்படுத்தும் அற்புத சதாப்பிலை மூலிகை குடிநீர்!

0

பாரிச வாயு எனும் பக்கவாதத்தை குணப்படுத்தும் அற்புத சதாப்பிலை மூலிகை குடிநீர்!

பாரிச வாயு எனும் பக்கவாதத்தின் பாதிப்பால் உடல் நலமின்றி, வீடுகளிலேயே இருப்பார்களிற்கு அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி நிவாரணமாக காணப்படுகின்றது. இச்சதாப்பிலைகளை நன்கு அரைத்து, உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவி வரும் போது, சிறிது சிறிதாக பாதிப்புகள் நீங்குவதுடன், அவர்களின் அங்கங்கள் செயல்பட ஆரம்பிக்கும். இதனைவிட, வெரிகோஸ் வெயின் என்றழைக்கப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாகும் தன்மை கொண்டது.

சதாப்பிலை குடிநீர் தரும் அரிய நன்மைகள் :

சதாப்பிலைகளை சிறிதளவான நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீர் சுண்டி வந்ததும், அதனை ஆற வைத்து, தினமும் இரு வேளை அல்லது மூன்று வேளை பருகி வரும் போது, மூட்டு வலி குணமாகுவதுடன், குடல் புழுக்கள் அழிவடைதல், உடல் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்குதல் மற்றும் உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகுதல் என்பன இடம்பெறும். மேலும், சதாப்பிலை குடிநீர், கீழ்க்கண்ட வியாதிகளின் பாதிப்பினையும் நீக்கும்

கடுமையான ஆஸ்துமா, சளி இருமல் பாதிப்பு உள்ளவர்கள் மூச்சு விடுவதில், சுவாசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, இரவில் உறங்குவதற்கு மிகவும் சிரமப்படுபவர்களுக்கு இப்பிரச்சினைகள் நீங்கி, சுவாசம் சீராகி, உடல் நலம் மேம்பட்டு நல்ல உறக்கத்தை அடைய, சதாப்பிலை உதவிசெய்யும்.

சதாப்பு இலைகளுடன் சிறுநாகப்பூ விதைகளைச் சேர்த்து அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வரும் போது, விட்டுவிட்டு வரும் காய்ச்சல்; மற்றும் இருமல் பாதிப்புகள் நீங்கும்.

அதிமதுரம், பேரரத்தை, வசம்பு மற்றும் சதாப்பிலை ஆகியனவற்றை சேர்த்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடித்து தினமும் பருகி வரும் போது, காய்ச்சல் மற்றும் உடல் வலிகள் தீரும்.

இலைகளை நன்கு உலர்த்தி, தூளாக்கி, தூபக்காலில் உலர்ந்த தேங்காய் மூடிகளை வைத்து, தணலை உண்டாக்கி, அதில் உலர்ந்த சதாப்பிலை தூளையோ அல்லது உலர்ந்த இலைகளையோ போட்டு, எழும் புகையை, தினமும் ஆஸ்துமா மற்றும் இருமல் பாதிப்புள்ளவர்கள் நன்கு சுவாசி;து வரும் போது, சளியின் கடுமை படிப்படியாகக் குறைவடைவதுடன், நல்ல உறக்கமும் உண்டாகும். மேலும், இந்தப் புகையை, காக்கா வலிப்பு உள்ளவர்களும் சுவாசிககும் போது, பாதிப்புகள் விலகும். இவற்றைவிட,

• சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலைப் போக்குவதுடன், சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்குதல்.

• காதுகளில் உள்ள புண் மற்றும் வலியை நீக்குதல்.

• உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து, எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்குதல்.

• தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கு போன்ற பாதிப்புகளை சீராக்குதல்.

• முதுகு தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளை குணமாக்குதல்.

• பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதலைக் கட்டுப்படுத்தும்.

• ஞாபக நக்தியை அதிகரித்தல்.

• முகம் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

• மன அழுத்தம், மனச் சோர்வை போன்றனவற்றை நீக்கி, மனதை உற்சாகமாக செயல்பட வைத்தல்.

• தொண்டை வலி மற்றும் நாக்கின் சுவையின்மை போன்ற கோளாறுகளை சீராக்குதல்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் சூட்டைத் தணித்து குறட்டை விடுவதை போக்க சிறிது நீரில் ‘முசுமுசுக்கை’ இப்படி பயன்படுத்துங்கள்!
Next articleமுடக்கு வாதத்தை குணப்படுத்த இவ்வளவும் போதும்!