ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் ஏறிய நிலையில் பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்!

0

உலகில் பொதுவாக அயர்லாந்து நியூசிலாந்து மற்றும் ஆர்ட்டிக் போன்ற பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காணப்படுகின்ற பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்பது மிகவும் தவறான கருத்தாக உள்ளதுடன் குறிப்பிட்ட ஒரு சில வகையான பாம்புகள் தவிர்ந்த ஏனைய பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே.

இந்தியாவில் மட்டும் வாழக்கூடிய 246 வகையான நச்சுப் பாம்புகளில் நல்ல பாம்பு கட்டு வீரியன் கண்ணாடி வீரியன் சுருட்டை பாம்பு கரு நாகம் மற்றும் ராஜ நாகம் ஆகிய ஆறு வகையான பாம்புகள் மட்டுமே மிகவும் அபயகரமடான பாம்புகளாக காணப்படுகின்றன. இவற்றில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றது.

பாம்பு விஷக்கடிக்கான முறிவு மருந்தாகிய “சீர நஞ்சு” இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பின்னர் அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுத்து தயாரிக்கப்படுகின்றது. இதுவே அலோபதி மருத்துவத்தில் சகலவிதமான பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப்படுகின்றது.

மேலும் ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் ஏறிய நிலையில் இந்த “சீர நஞ்சு” நல்ல குணமளிக்கும் மருந்தாக தொழிற்படுகின்ற அதேவேளை பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாம்பு கடித்து விஷம் ஏறிய நிலையில் பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்

நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் ஏற்படும் அறிகுறிகள்

மூக்கில் நுரை வருதல், மயக்கம் வருமதல், வாந்தி வருதல், நடை தளருதல், கடிவாய் எரிதல், உயிர்ப்பு தடை படும் இறப்பு நேரிடும். வேப்பிலை கசக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், மிளகு காரம் இருக்காது, இரு பற்கள் தடம் இருக்கும், குருதி பெரும்பாலும் வராது.

நல்ல பாம்பு கடித்து விட்டால் என்ன செய்யவேண்டும்

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி. அளவிற்கு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்து வருவதுடன், சுயநினைவற்று காணப்படின் அவரின் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைத்து வாய் திறக்கும் வாழைப் பட்டை சாற்றை ஊற்றும் போது விஷம் முறிந்து அவர் பிழைத்துக் கொள்வார்கள். அரை மணி நேரத்தினுள் மருந்து கொடுத்தல் மிகமிக அவசியமாகின்றது.

வீரியன் பாம்பு கடித்து விட்டது என்றால் ஏற்படும் அறிகுறிகள்

விரியன் பாம்பு கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரிவதுடன் குருதி தொடர்ந்து வெளியேறி கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும். மேலும் வாய் மற்றும் மூக்கில் குருதி வெளியேறுவதுடன் சிறு நீரும் குருதியாகும். மேலும் ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் அதேவேளை சிரியா நங்கை வேம்பு கசக்காது.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் என்ன செய்யவேண்டும்

இவ்வாறான சூழ்நிலையில் அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் உடனடியாக விஷம் இறங்கி விடும். பின்னர் 10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்க ஆரம்பிப்பதுடன் மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுக்கும் போது கசப்பு நன்றாகத் தெரிவதுடன் விஷமும் படிப் படியாக இறங்குவது தெரியும்.

இவ்வாறாக ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரே இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 24.01.2019 வியாழக்கிழமை!
Next articleசுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால்!