கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்றைய தினம் காலை சுமார் 8.45 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் ஐம்பது பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கொழும்பு தேவாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மூன்றிலும், மட்டக்களப்பில் தேவாலயமொன்றிலும், நீர்கொழும்பில் தேவாலயமொன்றிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பித்தக்கது.
A dashcam footage showing the blast which occurred this morning at Kochikade St. Anthony's church.#SriLanka #Lk pic.twitter.com/bIWctmTUup
— Kavinthan s (@Kavinthans) April 21, 2019