தெஹிவளையில் சற்று முன்னர் குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் இருந்து பாரிய சத்தம் ஒன்று கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்று வரும் நிலையில் இந்தத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
இதனால் மிருகக் காட்சிசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்ததாகவும், தெஹிவளை- மிருகக் காட்சிசாலையின் பதில் பணிப்பாளர் தம்மிகா தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று காலை முதல் இலங்கையின் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகி வரும் நிலையில் தெஹிவளையில் இடம்பெற்றுள்ளது ஏழாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.