வாய் புண்ணை வேகமாக குணப்படுத்துவதற்கு இவற்றை செய்யுங்கள்!

0

வாய்ப்புண் என்பது பொதுவாக சாதாரண விடயமாக தோன்றினாலும், அதனைக் கவனிக்காமல் விடுதல் மற்றும் அடிக்கடி வாய்ப்புண் ஏற்படும் போது பிரச்சினை பெரிதாகிவிடும். ஆரம்பத்தில் நாக்கு, உதடு, அண்ணம், கன்னம் போன்ற பகுதிகளில் கடுகளவிற்கு சிறியதாக தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறும் போது அது வலியை ஏற்படுத்துவதுடன், சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி இன்னும் அதிகமாகரிப்பதுடன், கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

வாய்ப்புண் யாருக்கு வரும்?

பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். தவிர வெற்றிலை, புகையிலை, புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், பான்மசாலா போடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். அதாவது குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம்.

வாயினுள் புண்கள் வருவதற்கு காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படுவதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைவடைற்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் ஏற்படுகின்றது.

வாய்ப்புண் வருவதற்கு உணவு ஒவ்வாமை – குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் – மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்ற ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். அதிகமாகக் கவலைப்பட்டாலும் உதாரணமாக மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.

கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபடுதல், பல் துலக்கும்போது பிரஷ் குத்துதல், செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தாமை போன்ற காரணங்களால் அடிக்கடி வாய்ப்புண் வரும். இதனைவிட மிகச் சூடாக காபிஃடீ குடித்தல், வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை வைத்து மெல்லுதல் போன்றனவும் நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

பொதுவாக, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுதல் மற்றும் அவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் போன்றன காலணமாக ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றது.

வைட்டமின் பி2 குறைபாடு ஏற்படும் போது வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் ஏற்படுவதுடன், இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கு சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடுவதனால் தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

வாயினுள் கிருமிகளின் தாக்குதல்!

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக ஏற்படக் கூடிய கிரந்தி நோய், தட்டம்மை, வாயம்மை, வின்சன்ட் நோய், சின்னம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் ஏற்படுவதுடன், ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் ஏற்பட்டு புண் ஏற்படும். மேலும், அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாக அமைவதுடன், பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.

வாய்ப்புண்கள் சரியாக என்ன சிகிச்சை?

பொதுவாக வாய்ப்புண்கள் சரியான உணவுப் பழக்கவழக்கம் மூலமே குணமாகி விடும். எனினும், நீண்டகாலமாக ஆறாத வாய்ப்புண்கள் புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. இதனால் வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

பொதுவாக மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தல் அல்லது லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாத காலம் தொடர்சியாக சாப்பிட்டு வருதல் அல்லது ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவுதல் என்பவற்றுடன் வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட்டு வருதல் என்பன வாய்ப்புண் மீண்டும் வராது பாதுகாக்கின்றன. மேலும், பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவுதல்; நல்ல பலன தரும்.

வாய்ப்புண்ணை தடுப்பது எப்படி?

பொதுவாக வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படியாக கருதப்படுகின்றது. எனவே, ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்வதுடன், கூரான பற்களைச் சரி செய்தலும் வேண்டும். புகை பிடித்தல், வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுதல் மற்றும் மது என்பனவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமைஃமருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும மாறாக செயற்கைப் பல்செட்டால் பிரச்சினை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது. ‘சோடியம் லாரில் சல்பேட் (Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது.

எந்த உணவு கள் முக்கியம்?

முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் வெல்லம், தேன், பேரீச்சை, கோதுமை, ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வரும் போது ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படக் கூடிய வாய்ப்புண்ணை நிச்சயம் தடுக்க முடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழ் நடிகைகளின் சகோதரிகள்!
Next articleநடிகர் ஜீவாவின் அடுத்த‌ அசத்தல் படம் இதுதாங்க‌! பாத்தா அசந்து போய்டுவீங்க!