பிரிந்து செல்ல முயன்ற மனைவியை நடு வீதியில் இரத்தம் சொட்டச்சொட்ட நிர்வாண இளைஞர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பிரிட்டனில் அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஜாக் புஷெல் வயது (22) தன்னுடைய காதலியுடன் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
அதிகாலை 5 மணிக்கு திடீரென வீட்டினுள் வைத்து ஒரு குழந்தைக்கு தாயான ஜேட் கல்லஹரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் வலிதாங்க முடியாத ஜேட், ‘ஜூலி என்னை கொலை செய்ய போகிறான் என கத்தியுள்ளார்.
நிர்வாணமாக தெருவில் ஓடி வந்த மனைவி
அவரது சத்தம் கேட்டு வந்த அயலர்கள் தலை முழுவதும் இரத்தத்துடன் தெருவில் ஓடிவந்த ஜேட்டை பார்த்துவிட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் வீட்டிலிருந்து நிர்வாணமாக தெருவில் ஓடிவந்த ஜாக், காதலியின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக தங்கியுள்ளான்.
இதில் நிலைகுலைந்த ஜேட் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், இரத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த ஜேட்டை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ஜாக்கையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.