நடிகர் விஜயை கலாய்த்த இலங்கையர் உயிருக்கு போராட்டம்.. இலங்கை அகதிகள் முகாமில் நடந்த சம்பவம்!

0

சென்னை புழலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அஜித் ரசிகரை, விஜய் ரசிகர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்-விஜய் இருவரில் யார் கெத்து என்பதை நிரூபிக்க சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மோதல் நடைபெற்று வருவதற்கே கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை அகதிகள் முகாமில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த முகாமில் வசிப்பவர் உமாசங்கர் (32). இவர் அஜித் ரசிகர். இங்கு வசிப்பவர் ரோஷன் (34) இவர் விஜய் ரசிகர்.

இருவரும் வீட்டின் அருகில் பேசிக்கொண்டிருந்தபோது விஜய்யை பற்றி உமாசங்கர் தரைக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அடித்துக் கொண்டுள்ளனர்.

ஆத்திரம் அடைந்த ரோஷன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து உமாசங்கரின் தலை, மார்பு பகுதியில் சரமாரி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

ரத்தவெள்ளத்தில் விழுந்து துடித்த உமாசங்கரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுபாடியநல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், புழல் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து விஜய் ரசிகர் ரோஷன் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதைகளை சாப்பிடுங்கள்! எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும்? எப்படி தெரியுமா?
Next articleபிரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !