தொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்!

0

அயர்லாந்தின் வடக்கு மாகாணத்தில் பெண்மணி ஒருவர் வலி நிவாரண மாத்திரையை உட்கொண்டுள்ளார்.

ஆனால் சில நாட்கள் கழித்து தொண்டையில் இருந்த ஒவ்வாமை காரணமாக, மருத்துவரிடம் சென்றுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே மூலம் தான் விழுங்கியது மாத்திரை அல்ல. ஒரு முழு மாத்திரை அட்டையையே விழுங்கியுள்ளோம் என்கிற உண்மையை அப்போதுதான் புரிந்துகொண்டுள்ளார்.

எனினும் அந்த மாத்திரை அட்டையினை விழுங்கியது பற்றி தனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்றும், எப்படி அந்த சம்பவம் நிகழ்ந்ததென்றே தெரியவில்லை என்றும் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

மாத்திரை விழுங்கிவிட்டேனா? என்று மறதி காரணமாக பெரியவர்கள் கேட்பதுண்டு. ஆனால் மாத்திரை அட்டையையே விழுங்கியதே தெரியாமல் இருந்துள்ள இந்த பெண்மணியின் நினைவாற்றல் அந்த மருத்துவமனையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம் 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை!
Next articleதந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள்! நான்கு ஆண்டுகள் சவரம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!