ஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம் 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை!

0

கோவை கருமத்தம்பட்டியில் தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ்(38). இவர் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதமாக அமலி நகரில் வாடகை வீட்டில் மனைவி ஷோபனா(30), மகன் ரித்திக் மைக்கேல்(7), மகள் ரியா ஏஞ்சலின்(1) மற்றும் தாயார் புவனேஸ்வரி(65) ஆகியோருடன் வசித்து வந்தார்.

அந்தோணி ஆரோக்கியதாசுக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகு வலி இருந்து வந்தது. ஆனால் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அந்தோணி ஆரோக்கியதாஸ் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு பல ஆண்டுகளாக முதுகுவலி இருந்துள்ளது என்றும், இதனால் மனம் வெறுப்படைந்து இந்த முடிவை தேடிக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மையா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து கருமத்தம்பட்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
Next articleதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்!