தரையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்.

0

பாயில் படு நோயை விரட்டு, இது நமது தமிழ் பழமொழி…

1) பாய் உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது,

2) கர்பினி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி, முதுகு வலி வரவே வராது,

3) பாயில் உறங்கும் பழக்கமுடைய பெண்களுக்கு பிரசவ நேரத்தில் “சிசேரியன்” தேவைப்படாது,

4) பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுழுக்கு பிடிக்காது, குழந்தையின் முதுகெலும்பு சீர்படும் குழந்தை வேகமாக வளர உதவிடும்,

5) கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பாயில் உறங்கினால் இளம் வயது கூண் முதுகு விழாது,

6) பெரும்பாலான முதியோர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதே அதிகம் விரும்புவார்கள் அதன் காரணம் 60 வயதிற்கு மேல் உடலில் இரத்த ஓட்ட பிரச்சினை இருக்கும் பாயில் சமமாக கால் கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து கொழுப்பை குறைக்கிறது,

7) ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,

இரும்பு மரக் கட்டிலில் “பிளாஸ்டிக் போம்” மெத்தையில் உறங்குவதை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவது நம் உடலில் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தக் கூடியது…

“பாயின் எண்ணற்ற நன்மைகளை உணர்ந்த நமது பெரியோர்கள் “கல்யாண சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லாத ஒரு சீர்வரிசை கிடையவே கிடையாது,” என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article5 நிமிடத்தில் கழுத்தின் கருமை நீக்கி வெண்மையாக்கும் மஞ்சள் ப்ளீச்!
Next articleகூந்தல் அடர்த்தியாக மாற 1 வாரம் போதும்!