கொழும்பு – கொள்ளுப்பிட்டி நகரில், நெல்சன் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன.
குறித்த வீட்டில் வசித்து வந்த 76 வயதான தமிழ் பெண்மணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்த சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: