காதல் என்பது மனிதனின் பாதையில் வலைவிரித்துக் காத்திருக்கும் போதை போன்றது. காதல் என்ற வார்த்தைய கேட்டாலே மனதுக்குள் ஒரு சந்தோஷம் எப்பொழுதும் ஒட்டிக் கொள்ளும்.
முன் பின் தெரியாத இரு மனங்களைக் கூட இந்த ஒரு சொல் இணைத்து விடும். அந்த அளவுக்கு காதலின் பலம் ஆளப் பெரியது.
இந்த தலைமுறையில் கண்டதும் காதல், ஃபேஸ்புக்கில் லவ் ஸ்மைலி போட்டால் காதல், ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அக்ஸப்ட் செய்தால், வாட்ஸ்அப் நம்பர் கொடுத்தால் என காதல் பலவகை படுகிறது.
காதலில் கண்மூடித்தனமாக விழுவது ஒரு அபூர்வமான உணர்வு தான். சில காதல் திருமணத்தில் வாழும் சில காதல் பிரிவில் வாழும். ஆனால் என்றும் காதலுக்கு முடிவு மட்டும் இல்லை.
இந்த காதல் ஜோடியும் அப்படிதான். வெளிநாட்டு பெண்ணை காதலித்து இந்திய இளைஞர் திருமணம் செய்துள்ளார். தமிழ் மீதும் தமிழர் மீது கொண்ட காதலினால் வெளிநாட்டு யுவதி தமிழ் கலாச்சாரத்திற்கு ஈர்க்கப்பட்டு தமிழ் பெண்ணாகவே மாறி விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.