தமிழீழ விடுதலைப் புலிகள் யாரையுமே தமிழ் மக்கள் காட்டிக் கொடுத்தார்களா!

0

தமிழீழ விடுதலைப் புலிகள் யாரையுமே ஜூலைக் கலவரத்தின் பின்னர் தமிழ் மக்கள் காட்டிக்கொடுத்தார்களா என்று பிரதியமைச்சர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

”முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்தை விரும்பவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளைக் காட்டிக் கொடுத்தார்கள். ஆனால் 1983ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தின் போது என்ன நடந்தது? அமிர்தலிங்கம் பதவி விலகினார். அன்றிலிருந்து விடுதலைப் புலிகள் யாரையுமே தமிழ் மக்கள் காட்டிக் கொடுத்தார்களா?” என்று அவர் சபையில் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க உரையாற்றும்போது, 1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தை விட மோசமான தாக்குதல்களை தமிழீழ விடுதலைப்புலிகள் நிகழ்த்தியதாக குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் மக்களை மிதித்துக் கொண்டு தீர்வை வழங்கலாம் என்று சிங்கள மக்கள் நினைத்ததாகவும், ஆனால் அது பெரும் கலவரமாக மாறியதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

தொடர்ந்து, தமிழர்கள் வேறு நாட்டை கோரியதால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாதல் கணவர் தற்கொலைக்கு பின் மைனாவிற்கு இரண்டாவது திருமணமா! மாப்பிள்ளை இவர்தான்!
Next articleதுஷ்பிரயோகம் செய்யப்பட்ட 3 வயது சிறுமி! கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொலை! இந்திய மக்களை உலுக்கிய சம்பவம்!